Top posting users this month
No user |
Similar topics
விளையாட்டுத்துறையை மேம்படுத்த 12 வருட கால திட்டம்: பிரதமர்
Page 1 of 1
விளையாட்டுத்துறையை மேம்படுத்த 12 வருட கால திட்டம்: பிரதமர்
எதிர்வரும் காலங்களில் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு 12 வருட கால திட்டமொன்றை முன்னெடுப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்
41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2028 இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்து துறைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற நிலைக்கு எமது நாடு உருவாக வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் விளையாட்டுத்துறைக்கான புதிய சட்டமூலமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிறுவனமொன்றை அடுத்த வருடம் முதல் நிறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் இந்த நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.
இளைஞர் யுவதிகளை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்தி இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீண்ட காலத் திட்டங்களை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது தேசிய விளையாட்டுக்களில் ஒன்றான எல்லே போட்டியை மேம்படுத்தி சர்வதேச ரீதிக்கு கொண்டு செல்வதற்கு தனியார் மற்றும் அரச துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்துப் பிரிவுகளிலும் இலங்கை வீரர்கள் பங்குகொள்கின்ற அளவுக்கு ஒவ்வொரு துறையையும் மேம்படுத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
41 ஆவது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2028 இல் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்து துறைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பெறுகின்ற நிலைக்கு எமது நாடு உருவாக வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் விளையாட்டுத்துறைக்கான புதிய சட்டமூலமொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு விசேட நிறுவனமொன்றை அடுத்த வருடம் முதல் நிறுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் இந்த நிகழ்வின் போது தெரிவித்துள்ளார்.
இளைஞர் யுவதிகளை விளையாட்டுத்துறையில் ஈடுபடுத்தி இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீண்ட காலத் திட்டங்களை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது தேசிய விளையாட்டுக்களில் ஒன்றான எல்லே போட்டியை மேம்படுத்தி சர்வதேச ரீதிக்கு கொண்டு செல்வதற்கு தனியார் மற்றும் அரச துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பிதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளில் அனைத்துப் பிரிவுகளிலும் இலங்கை வீரர்கள் பங்குகொள்கின்ற அளவுக்கு ஒவ்வொரு துறையையும் மேம்படுத்துவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

» மஹிந்த அபேகோனுக்கு இரண்டரை வருட சிறை
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» சஷிக்கு விளக்கமறியல் நீடிப்பு! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» சஷிக்கு விளக்கமறியல் நீடிப்பு! குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 வருட சிறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum