Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்! சிப்பாயை காப்பாற்ற முயற்சி

Go down

உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்! சிப்பாயை காப்பாற்ற முயற்சி Empty உயிரிழந்த மாணவியின் பெற்றோருக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்! சிப்பாயை காப்பாற்ற முயற்சி

Post by oviya Sat Dec 05, 2015 1:10 pm

வேலணை புளியங்குடல் பகுதியில் நேற்றைய தினம் கடற்படை வாகனம் மோதி உயிரிழந்த மாணவியின் குடும்பத்திடம் செல்லும் புலனாய்வாளர்கள், குறித்த வழக்கை வாபஸ் பெறுமாறு குடும்பத்தை அச்சுறுத்தி வருகின்றனர்.
மேற்படி விபத்துச் சம்பவத்தினை நீதிமன்ற வழக்கு ஆக்க வேண்டாம் என்றே புலனாய்வாளர்கள் அவர்களை அச்சுறுத்தி வருவதுடன், எவ்வளவு பணம் கொடுப்பதாகவும் பேரம் பேசி வருகின்றனர்.

ஊர்காவற்றுறை நாரந்தனை வடக்குப் பகுதியினைச் சேர்ந்த மாணவி உ. உசாந்தி நேற்றுக் காலை புளியங்கூடல் சந்திக்கு அருகில் கடற்படையினருடை பேருந்து மோதிய விபத்துச் சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மாணவி உயிரிழந்தமைக்குக் காரணமான கடற்படை சிப்பாய் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டார்.

உயிரிழந்த மாணவியின் குடும்பம் நாளாந்தம் கிடைக்கும் கூலி வேலைக்குச் செல்லும் தந்தையும், தாயும் கொண்டுவரும் சிறு ஊதியத்திலேயே தமது அன்றாட வாழ்க்கையினை கொண்டு நடத்தும் நிலையில் இருந்துள்ளனர்.

இதனை கண்டுகொண்ட புலனாய்வாளர்கள் நீதிமன்ற வழக்கினை தள்ளுபடி செய்யும் நோக்கில் அக் குடும்பத்தினருடனும், உறவினர்களுடனும் சமரசம் பேசும் முயற்சியில் நேற்று முழுவதும் ஈடுபட்டனர்.

சமரசத்திற்கு ஒத்துக் கொள்ள குடும்பத்தினர் மறுத்ததை அடுத்து ஈழப்பீடாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும், கடற்படையினரிடம் இருந்து பெற்றுத் தருவோம் என்றும். சடலத்தினை வைத்திய சாலையில் இருந்து இலகுவான முறையில் மீளப் பெற்று இறுதிக்கிரிகைக்கான பணத்தினைத் தருவதாகவும் கூறி புலனாய்வாளர்கள் சமரசம் பேசும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், மகளின் உயிரினைப் பறிகொடுத்த அவர்கள் புலனாய்வாளர்களுடைய சமரச பேச்சிற்கு இடம் கொடுக்கவில்லை.

இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் வீட்டினை அண்மித்த பகுதியில் நிலை கொண்டிருந்த புலனாய்வாளர்கள் அவ்வீட்டிற்குச் சென்று வருபவர்களிடம் நீதிமன்ற வழக்குத் தொடர்பாக மாணவியின் குடும்பம் கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதையும் காணக் கூடியதாக இருந்தது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum