Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


போக்குவரத்து வேலைநிறுத்தம்: அழைத்து பேச கூட அரசுக்கு மனமில்லையா? விஜயகாந்த் விளாசல்

Go down

போக்குவரத்து வேலைநிறுத்தம்: அழைத்து பேச கூட அரசுக்கு மனமில்லையா? விஜயகாந்த் விளாசல் Empty போக்குவரத்து வேலைநிறுத்தம்: அழைத்து பேச கூட அரசுக்கு மனமில்லையா? விஜயகாந்த் விளாசல்

Post by oviya Tue Dec 30, 2014 2:16 pm

போக்குவரத்து தொழிலாளர்களை அழைத்து பேசுவதற்குகூட இந்த அரசுக்கு மனம் இல்லையா என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த விவகாரத்தில் உடனடி தீர்வு கண்டு தமிழகத்தில் பேருந்து போக்குவரத்தை சகஜநிலைக்கு திரும்பக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தினால், அவசர காரியங்களுக்காக வெளியே சென்ற மக்களும், வெளியூர் சென்றவர்களும் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றனர்.

அரசு நடத்தும் வேலை வாய்ப்பு தேர்வுக்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாமல் பலரும் சிக்கிக்கொண்டனர். தொழிற்சங்கத்தினரை அழைத்துப் பேசாமல் இத்துறையின் அமைச்சர் போக்குவரத்து பணிமனையில் ஆய்வு செய்தால் இப்பிரச்சனை தீர்ந்துவிடுமா?

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தொழிற்சங்கத்தினரின் பிரச்சனைகளை பேசி தீர்க்கவேண்டுமே ஒழிய, போராட்டத்தை உடைக்கும் முயற்சியிலோ, தொழிற்சங்கத்தினரை பிரித்தாளும் சூழ்ச்சியால் பிளவுபடுத்த எண்ணக்கூடாது.

தொழிலாளர்கள் தங்களை ஆட்சியாளர்கள் அழைத்துப்பேச வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அழைத்து பேசுவதற்குகூட இந்த அரசுக்கு மனம் இல்லையா?

2001ல் ஆட்சிக்கு வந்தபோதும் இதேபோன்று 15 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடந்துள்ளது. கடந்த ஆட்சியில் இது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக தொழிற்சங்கம் போராட்டம் நடத்தியது.

அதே போல்தான் தற்போதும், அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டம் நடத்துகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் உங்கள் நிலைப்பாட்டில் ஏன் இந்த மாற்றம்? அன்றைக்கு நியாயமாக தெரிந்தவை இன்று நியாயமாக தெரியவில்லையா?

அனுபவம் இல்லாத தற்காலிக பணியாளர்களை கொண்டு ஒருசில பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதையும் மக்கள் நம்பி அப்பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள்.

அதன் விளைவுதான் மதுரையில் கல்லூரி மாணவர் பலியாகியுள்ளார். முதியோர், மாணவ, மாணவியர், உடல்நலம் குன்றியோர், பணிக்கு செல்வோர் என அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தின் வழக்கை காரணம் காட்டாமல், அரசியலாகப் பார்க்காமல், பொதுமக்களுடைய அடிப்படை பிரச்சனையாக கருதி, இத்துறையின் அமைச்சரும், முதலமைச்சரும் நேரடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு முடிவுக்கு கொண்டுவர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum