Top posting users this month
No user |
Similar topics
காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி
Page 1 of 1
காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி
தேனி மாவட்டத்தில் 10 ஆண்டுளுக்கு பிறகு சந்தித்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜான்சன்(34). இவர் கடந்த 2004–ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகில் உள்ள சாலைகிராமத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த அமல்ராஜ் மகள் லீமாரோஸ்(26) என்பவருடன் காதல் ஏற்பட்டது. லீமாரோஸ் கல்லூரியில் படித்து வந்ததால் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2005–ம் ஆண்டு மதுரையில் நடந்த விபத்தில் ஜான்சன் படுகாயமடைந்து சுயநினைவு இழந்தார். தனது காதலனை லீமாரோஸ் பார்க்க சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.
இதனை கேட்டதும் நிலைகுலைந்த லீமாரோஸ் மிகுந்த மனவேதனையில் இருந்தார். அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தபோது அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
தனது காதலனை தவிர வேறு யாரையும் மணம் முடிக்க விரும்பாத லீமாரோஸ் கன்னியாஸ்திரியாக மாறினார். 10 ஆண்டுகள் படிப்பு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் பயிற்சிக்காக தேனி அருகில் உள்ள ராயப்பன்பட்டிக்கு சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக ஒரு தேவாலயத்தில்,தனது காதலனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அழுதுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதுகுறித்து லீமாரோஸ் தனது பெற்றோர்களிடம் கூறியபோது, அவர்கள் இதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டனர்.
பின்னர் உசிலம்பட்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் வாழ்க்கையில் யாரும் குறுக்கிட வேண்டாம் என பாதுகாப்பு கேட்டு உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பொலிசார், இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து திருமணம் நடைபெற்ற சந்தோஷத்தில் மணமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜான்சன்(34). இவர் கடந்த 2004–ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகில் உள்ள சாலைகிராமத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது அதே ஊரை சேர்ந்த அமல்ராஜ் மகள் லீமாரோஸ்(26) என்பவருடன் காதல் ஏற்பட்டது. லீமாரோஸ் கல்லூரியில் படித்து வந்ததால் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 2005–ம் ஆண்டு மதுரையில் நடந்த விபத்தில் ஜான்சன் படுகாயமடைந்து சுயநினைவு இழந்தார். தனது காதலனை லீமாரோஸ் பார்க்க சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.
இதனை கேட்டதும் நிலைகுலைந்த லீமாரோஸ் மிகுந்த மனவேதனையில் இருந்தார். அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தபோது அதனை ஏற்க மறுத்துவிட்டார்.
தனது காதலனை தவிர வேறு யாரையும் மணம் முடிக்க விரும்பாத லீமாரோஸ் கன்னியாஸ்திரியாக மாறினார். 10 ஆண்டுகள் படிப்பு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் பயிற்சிக்காக தேனி அருகில் உள்ள ராயப்பன்பட்டிக்கு சென்றுள்ளார்.
எதிர்பாராதவிதமாக ஒரு தேவாலயத்தில்,தனது காதலனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அழுதுள்ளனர்.
இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதுகுறித்து லீமாரோஸ் தனது பெற்றோர்களிடம் கூறியபோது, அவர்கள் இதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டனர்.
பின்னர் உசிலம்பட்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் வாழ்க்கையில் யாரும் குறுக்கிட வேண்டாம் என பாதுகாப்பு கேட்டு உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பொலிசார், இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து திருமணம் நடைபெற்ற சந்தோஷத்தில் மணமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விபத்தில் இறந்த காதலன்: பிரிவை தாங்க முடியாத காதலி தற்கொலை
» சோகமாய் போன காதலர் தினம்! விபத்தில் காதலி பலி...உயிருக்கு போராடும் காதலன்
» அஜித் படக்குழுவுடன் இணைந்த விஜய்
» சோகமாய் போன காதலர் தினம்! விபத்தில் காதலி பலி...உயிருக்கு போராடும் காதலன்
» அஜித் படக்குழுவுடன் இணைந்த விஜய்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum