Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி

Go down

காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி Empty காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி

Post by oviya Tue Dec 30, 2014 2:14 pm

தேனி மாவட்டத்தில் 10 ஆண்டுளுக்கு பிறகு சந்தித்த காதல் ஜோடிகள் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் ஜான்சன்(34). இவர் கடந்த 2004–ம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகில் உள்ள சாலைகிராமத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.

அப்போது அதே ஊரை சேர்ந்த அமல்ராஜ் மகள் லீமாரோஸ்(26) என்பவருடன் காதல் ஏற்பட்டது. லீமாரோஸ் கல்லூரியில் படித்து வந்ததால் படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2005–ம் ஆண்டு மதுரையில் நடந்த விபத்தில் ஜான்சன் படுகாயமடைந்து சுயநினைவு இழந்தார். தனது காதலனை லீமாரோஸ் பார்க்க சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

இதனை கேட்டதும் நிலைகுலைந்த லீமாரோஸ் மிகுந்த மனவேதனையில் இருந்தார். அவரது பெற்றோர் வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தபோது அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

தனது காதலனை தவிர வேறு யாரையும் மணம் முடிக்க விரும்பாத லீமாரோஸ் கன்னியாஸ்திரியாக மாறினார். 10 ஆண்டுகள் படிப்பு முடிய இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் பயிற்சிக்காக தேனி அருகில் உள்ள ராயப்பன்பட்டிக்கு சென்றுள்ளார்.

எதிர்பாராதவிதமாக ஒரு தேவாலயத்தில்,தனது காதலனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். இருவரும் என்ன பேசுவது என்று தெரியாமல் அழுதுள்ளனர்.

இதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். இதுகுறித்து லீமாரோஸ் தனது பெற்றோர்களிடம் கூறியபோது, அவர்கள் இதற்கு சம்மதிக்க மறுத்துவிட்டனர்.

பின்னர் உசிலம்பட்டியில் உள்ள ஒரு தேவாலயத்தில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தங்கள் வாழ்க்கையில் யாரும் குறுக்கிட வேண்டாம் என பாதுகாப்பு கேட்டு உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பொலிசார், இருவரின் குடும்பத்தினரையும் வரவழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து திருமணம் நடைபெற்ற சந்தோஷத்தில் மணமக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum