Top posting users this month
No user |
Similar topics
தஞ்சை பெரியகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம்
Page 1 of 1
தஞ்சை பெரியகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம்
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் 100 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தேரோட்டம் நடந்துள்ளது.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவிலில் அவரது காஅல்த்தில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.
பின்னர் காலப் போக்கில் நின்றுபோன இந்த விழாக்களை தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்கள் சித்திரை திருவிழாவாக 18 நாட்கள் நடத்தியுள்ளனர்.
இந்த சித்திரை திருவிழாவில் 15–ம் நாளன்று தேரோட்டம் நடை பெற்றுள்ளது. இந்த தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்ததால் கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு தஞ்சை பெரியகோவிலுக்கு புதிதாக தேர் செய்ய ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இவற்றில் ரூ.37 லட்சம் மதிப்பில் சுமார் 40 டன் எடையில் தேர் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 100 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் இன்று நடந்துள்ளது.
இதையொட்டி காலை 5.30 மணிக்கு பெரியகோவிலில் இருந்து அஸ்திர தேவர், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், கமலாம்பாள் சமேத தியாகராஜர், நீலோத்ராம்பாள், சண்டீகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் தேரில் வைக்கப்பட்ட தியாகராஜருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது.
பிறகு சரியாக காலை 6.25 மணிக்கு தேர் நிலையில் இருந்து இழுக்கப்பட்ட போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்ததுள்ளனர்.
தேரை அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், மாவட்ட ஆட்சியர் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலரும், மூத்த இளவரசருமான பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்துள்ளனர்.
மேலும், தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வரும் ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெரியகோவிலில் அவரது காஅல்த்தில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன.
பின்னர் காலப் போக்கில் நின்றுபோன இந்த விழாக்களை தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்கள் சித்திரை திருவிழாவாக 18 நாட்கள் நடத்தியுள்ளனர்.
இந்த சித்திரை திருவிழாவில் 15–ம் நாளன்று தேரோட்டம் நடை பெற்றுள்ளது. இந்த தேர்கள் அனைத்தும் சிதிலமடைந்ததால் கடந்த 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது தமிழக அரசு தஞ்சை பெரியகோவிலுக்கு புதிதாக தேர் செய்ய ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது.
இவற்றில் ரூ.37 லட்சம் மதிப்பில் சுமார் 40 டன் எடையில் தேர் செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை 100 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் இன்று நடந்துள்ளது.
இதையொட்டி காலை 5.30 மணிக்கு பெரியகோவிலில் இருந்து அஸ்திர தேவர், விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், கமலாம்பாள் சமேத தியாகராஜர், நீலோத்ராம்பாள், சண்டீகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைந்துள்ளனர்.
பின்னர் தேரில் வைக்கப்பட்ட தியாகராஜருக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டுள்ளது.
பிறகு சரியாக காலை 6.25 மணிக்கு தேர் நிலையில் இருந்து இழுக்கப்பட்ட போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய என்ற கோஷங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்ததுள்ளனர்.
தேரை அமைச்சர்கள் வைத்திலிங்கம், காமராஜ், மாவட்ட ஆட்சியர் தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலரும், மூத்த இளவரசருமான பாபாஜி ராஜா பான்ஸ்லே ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்துள்ளனர்.
மேலும், தஞ்சை பெரியகோவில் தேரோட்டத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் இன்று உள்ளுர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காதலன் இறந்த சோகம்…கன்னியாஸ்திரியாய் போன காதலி: 10 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த ஜோடி
» மழை பெய்த பிறகு....
» தஞ்சை வேதநாயகர் தமிழ்க்கொடை
» மழை பெய்த பிறகு....
» தஞ்சை வேதநாயகர் தமிழ்க்கொடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum