Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


காதலனுடன் ஓடிய 9 மாத கர்ப்பிணி பெண்: அதிர்ச்சி கடிதம் சிக்கியது

Go down

காதலனுடன் ஓடிய 9 மாத கர்ப்பிணி பெண்: அதிர்ச்சி கடிதம் சிக்கியது Empty காதலனுடன் ஓடிய 9 மாத கர்ப்பிணி பெண்: அதிர்ச்சி கடிதம் சிக்கியது

Post by oviya Sat Oct 10, 2015 2:49 pm

9 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் கணவரை விட்டுவிட்டு தனது காதலனுடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி.

இவரது மகள் சரிதாவுக்கும்(24) வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பரதேசிப்பட்டி பகுதியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ராஜா(30) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது

ராஜா, சரிதாவின் சொந்த தாய் மாமா ஆவார். இந்நிலையில் சரிதா கர்ப்பமுற்றார்.

9 மாத கர்ப்பிணியான அவருக்கு தாய் வீட்டில் வைத்து வளைக்காப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. வளைக்காப்பு நிகழ்ச்சி முடிந்த மறுநாள் முதல் சரிதாவை காணாவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி மத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சரிதா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று வீட்டில் இருந்து மீட்கப்பட்டது.

அந்த கடிதத்தில், நானும், பிரபு என்பவரும் ஒரு வருடமாக காதலித்து வந்தோம். எனது வயிற்றில் வளரும் குழந்தை என்னுடைய காதலன் பிரபுவின் குழந்தை தான்.

நான் என் தாய் வீட்டில் இருந்து குழந்தை பெற்றுக் கொண்டால், அந்த குழந்தை என் கணவர் ராஜாவுக்கு பிறந்தது தான் என உறுதி ஆகிவிடும்.

அதனால் எனது காதலனுடன் நான் சென்று விடுகிறேன். என்னை யாரும் கட்டாயப் படுத்தவில்லை.

என்னுடைய விருப்பப்படி தான் காதலனுடன் சென்றுள்ளேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இச்சம்பவம் குறித்து மத்தூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து முதல் கட்டமாக விசாரணை மேற்கொண்டதில், அரசு பஸ் டிரைவர் ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதும், அவருக்கு 2 குழந்தைகள் இருப்பதும், அந்த திருமணத்தை மறைத்து இளம்பெண் சரிதாவை திருமணம் செய்துள்ளதும் தெரியவந்தது.

மேலும் சரிதாவும், அவரது காதலன் பிரபும் திருப்பூர் பகுதியில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளதையடுத்து இருவரையும் பிடிக்க போலிசார் திருப்பூருக்கு விரைந்துள்ளனர்.

கர்ப்பிணி பெண் ஒருவர் காதலனுடன் ஒடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum