Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அப்பாவி மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! மைத்திரி உறுதி

Go down

அப்பாவி மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! மைத்திரி உறுதி Empty அப்பாவி மக்களின் நலனைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன்! மைத்திரி உறுதி

Post by oviya Fri Oct 09, 2015 2:10 pm

நாட்டில் வறுமையை ஒழித்துக்கட்டும் வகையில் குறைந்த வருமானங்களைப் பெறும் குடும்பங்களின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக ஒரு புதிய நிகழ்ச்சித்திட்டத்தை அரசு ஆரம்பிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இந்த நாட்டில் அப்பாவி மக்களின் நலன்களைச் சுரண்டுவதற்கு அரசியல்வாதிகளுக்குத் தான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மக்களுக்காக அவர்களது நலநோம்புகை நடவடிக்கைகளுக்கு அரசு ஒதுக்கும் ஒவ்வொரு சதத்தையும் முதலீடு செய்யும் வகையில் ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

சுகததாச உள்ளக அரங்கில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்கள் 2700 பேர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நலநோம்புகை முறைமைகளில் குறைபாடுகள் உள்ளன. அக்குறைபாடுகளை நான் அமைச்சருடன் கலந்துரையாடி சரி செய்யவுள்ளேன்.

தங்களிடம் சேவைகளை நாடிவரும் மக்களுக்கு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும்.

இலங்கையில் அரச சேவையை ஊழல், மோசடி, வீண்விரயம் இல்லாத ஒரு சேவையாகக் கட்டியெழுப்புவதற்கு புதிய அரசு அர்ப்பணிப்போடு உள்ளது" என்றார்.

2014 - 2015ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற திறந்த போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு மூன்று வாரப் பயிற்சியின் பின்னர் அரச சேவை முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனங்கள் நேற்று கையளிக்கப்பட்டன.

அரச சேவை முகாமைத்துவத்திற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்குத் தோற்றிய மேலும் 1061 அதிகாரிகள் சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். அந்தவகையில். பல்வேறு அமைச்சுகள் திணைக்களங்களில் நிலவும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான 80 வீத வெற்றிடங்கள் இதன் மூலம் நிரப்பப்படவுள்ளது.

அரச நிர்வாகம், முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, அமைச்சின் செயலாளர் ஜே தடல்லகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum