Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


96% மதிப்பெண் எடுத்தும் இளைஞருக்கு வேலை தர மறுத்த ரயில்வே நிர்வாகம்

Go down

96% மதிப்பெண் எடுத்தும் இளைஞருக்கு வேலை தர மறுத்த ரயில்வே நிர்வாகம் Empty 96% மதிப்பெண் எடுத்தும் இளைஞருக்கு வேலை தர மறுத்த ரயில்வே நிர்வாகம்

Post by oviya Thu Oct 08, 2015 2:24 pm

டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் 96% மதிப்பெண் எடுத்தும் பணிநியமனத்துக்கு தேர்வு செய்யப்படாததால் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடியுள்ளார்.
லலித் குமார் (31 வயது) கடந்த டிசம்பர் 2013-ல், வடக்கு மண்டல ரயில்வே துறை குரூப் டி தேர்வு எழுதினார்.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது இவரைத் தேர்வு செய்யவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தகவலறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டு மனு செய்தார்.

அதன்படி ஓராண்டுக்குப் பிறகு கிடைத்த ஆர்டிஐ பதிலில், தவறான வழிமுறைகளை கடைபிடித்தே இவர் கட் ஆஃப் மார்க்குக்கு மிக அதிகமாக எடுத்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இந்தப் பதிலிலும் திருப்தி அடையாத லலித் குமார் மத்திய தகவல் அலுவலகத்தை அணுகியபோது, அதிகாரிகள் மத்திய தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு பதிவு செய்ய அறிவுறுத்தினர்.

இதனையடுத்து ஆகஸ்ட் 10-ம் திகதி தவறான வழிகளில் இவர் இத்தகைய மதிப்பெண்களை பெற்றார் என்று கூறிய மத்திய தகவல் அலுவலருக்கு 30 நாட்களுக்குள் காரணங்களை விளக்குமாறு கோரப்பட்டது.

லலித் குமார் கூறுகையில், நான் ஏமாற்றினேன், அல்லது முறையற்ற வழிகளைப் பயன்படுத்தினேன் என்று அவர்களால் நிரூபிக்க முடியுமா?

அவர்கள் இதனை நிரூபிக்கட்டும் என்று நான் சவால் விடுகிறேன். நான் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவன்.

எனது தந்தை முடக்கு வாத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார்.

எனவே இந்த ரயில்வே தேர்வு முடிவுகள் எங்கள் குடும்பத்துக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

எனது கடைசி முயற்சியாக எனக்கு நீதிகிடைக்க வழிவகை செய்யுமாறு பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum