Top posting users this month
No user |
Similar topics
நடிகர் விஜய் கடந்த 5 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்: வருமான வரித்துறை
Page 1 of 1
நடிகர் விஜய் கடந்த 5 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்தது அம்பலம்: வருமான வரித்துறை
நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் சமந்தா, நயன்தாரா ஆகியோர் கடந்த 5 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு செய்துள்ளனர்.
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, 'புலி' படத் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினரின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.
சென்னை, மதுரை, நாகர்கோவில், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட 32 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
வருமானவரித் துறை அதிகாரிகள் 300-க்கும் மேற்பட்டோர் 32 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரிச் சோதனையில் ரூ.25 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சோதனையின்போது ரூ.2 கோடி ரொக்கப் பணமும், ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து வருமானவரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உட்பட 10 பேரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம்.
இப்போதைக்கு யார் யார் வீட்டில் எவ்வளவு பணம், நகை பறிமுதல் செய்தோம் என்ற தகவலை அளிக்க முடியாது.
ஆனால், ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடி ரொக்கப் பணமும், ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவருமே வருமான வரி செலுத்தி வந்துள்ளனர். இருந்தாலும் அதை முழுமையாக செலுத்தாமல், ஒரு பகுதி மட்டும் செலுத்திவிட்டு வரி ஏய்ப்பு செய்திருக்கின்றனர்.
மேலும், நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் சமந்தா, நயன்தாரா கடந்த 5 ஆண்டுகளாக பாதியளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, 'புலி' படத் தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், ஷிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினரின் வீடுகள், அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக சோதனை நடத்தினர்.
சென்னை, மதுரை, நாகர்கோவில், கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட 32 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
வருமானவரித் துறை அதிகாரிகள் 300-க்கும் மேற்பட்டோர் 32 குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரிச் சோதனையில் ரூ.25 கோடி அளவில் வரி ஏய்ப்பு நடந்தது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சோதனையின்போது ரூ.2 கோடி ரொக்கப் பணமும், ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது குறித்து வருமானவரித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா உட்பட 10 பேரது வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டோம்.
இப்போதைக்கு யார் யார் வீட்டில் எவ்வளவு பணம், நகை பறிமுதல் செய்தோம் என்ற தகவலை அளிக்க முடியாது.
ஆனால், ஒட்டுமொத்தமாக ரூ.2 கோடி ரொக்கப் பணமும், ரூ.2 கோடி மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவருமே வருமான வரி செலுத்தி வந்துள்ளனர். இருந்தாலும் அதை முழுமையாக செலுத்தாமல், ஒரு பகுதி மட்டும் செலுத்திவிட்டு வரி ஏய்ப்பு செய்திருக்கின்றனர்.
மேலும், நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் சமந்தா, நயன்தாரா கடந்த 5 ஆண்டுகளாக பாதியளவில் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் 2வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை
» கேலி கிண்டலுக்கு ஆளான நடிகர் விஜய்: கொந்தளித்த ரசிகர்கள் பொலிசில் புகார்
» நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு
» கேலி கிண்டலுக்கு ஆளான நடிகர் விஜய்: கொந்தளித்த ரசிகர்கள் பொலிசில் புகார்
» நடிகர் விஷால் மீது மர்ம நபர் தாக்குதல்? நடிகர் சங்க தேர்தலில் பெரும் பரபரப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum