Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தோழியை அடைவதற்காக சூப்பராக திட்டம் போட்ட கோகுல் சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல் வெளியானது

Go down

தோழியை அடைவதற்காக சூப்பராக திட்டம் போட்ட கோகுல் சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல் வெளியானது Empty தோழியை அடைவதற்காக சூப்பராக திட்டம் போட்ட கோகுல் சிக்கியது எப்படி? திடுக்கிடும் தகவல் வெளியானது

Post by oviya Fri Sep 11, 2015 3:23 pm

விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கோகுல் ராஜ் பொலிசில் சிக்கியது எப்படி என்று பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு, டெல்லி, மும்பை விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்த பெங்களூரு சாப்ட்வேர் இன்ஜினியர் கோகுலை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விசாரணை தொடங்கியதும், முதலில் மனைவியின் மீது தவறு இருப்பதுபோன்றே கூறிய அவர் அதற்கான ஆதாரங்களை கேட்டபோது, ஆவணங்களை அழித்துவிட்டதாக கூறியுள்ளார். மேலும் கொலை நடந்த மறு நாள் போலீசார் விசாரணை முடிந்ததும், மனைவிக்கு எதிராக சேகரித்த போட்டோ மற்றும் ஆவணங்களை அழித்ததுடன் அதற்கு ஆதாரமாக இருந்த சிம்கார்டை, தீ வைத்து எரித்துள்ளார்.

பின்னர் செல்போனை குறைந்த விலைக்கு அறிமுகம் இல்லாத நபரிடம் விற்பனை செய்துள்ளார். மேலும் மனைவியை தாக்குவதற்கு பயன்படுத்திய விநாயகர் சிலையை, யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்ததாகவும், பொலிசார் சென்ற பின்னர் அதை அழித்துவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.

போலீசாரின் மறு விசாரணையில், மாட்டி கொள்ளாமல் இருப்பதற்காக, சுவரில் இருந்த ரத்த கறைகளை, பெயின்ட் அடித்து மறைத்திருக்கிறார். பின்னர் ஒரு வாரத்தில் பிளாட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்கு புறப்பட்டு சென்றுவிட்டார்

மனைவியை கொலை செய்த பின்னர் காதலியை கரம் பிடிக்கும் நோக்கத்தில் காதலின் கணவர் விசயத்தில் கோகுல் கவனம் செலுத்தியிருக்கிறார். சனிக்கிழமை தோறும் முன்னாள் காதலி தனுயா கோவிலுக்கு செல்வார். அந்த நேரத்தில் குழந்தையை பார்த்து கொள்வதாக கூறி நாடகமாடி அவர்கள் வீட்டின் டூப்ளிகேட் சாவியை வாங்கியுள்ளார்.

அதை பயன்படுத்தி, ஜோசின் படுக்கையறைக்கு சென்று கப்போர்டு சாவியை எடுத்துள்ளார். அதன் மூலம் ஜோசின் பாஸ்போர்ட்டை தனது செல்போன் மூலம் போட்டோ எடுத்துள்ளார். பின்னர், போட்டோ ஷாப் உதவியுடன், தனது போட்டோவை ஜோசின் போட்டோ இருக்கும் இடத்தில் ஓட்டியிருக்கிறார்.



பின்னர் அந்த ஆவணத்தை காண்பித்து, சிம்கார்டு மற்றும் புதிய செல்போன் வாங்கியிருக்கிறார். இதனிடையே ஜோசின் செல்போன், முகநூல் ஆகியவற்றை ஹேக் செய்ய முயன்றுள்ளார். அந்த முயற்சி தோல்வியடைந்ததால் தான் தனது சிம்கார்டு மூலம் மிரட்டல் மெசேஜ் அனுப்பவதற்கு திட்டமிட்டார். மேலும் ஜோஸ் சிறையிலிருந்து வெளியே வரக்கூடாது என்பதற்காக, பிரபல தீவிரவாதி மெஹதியின் கூட்டாளி போன்று சாட்சியங்களை ஜோடித்திருக்கிறார்.

வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததும் போலீசார் மெசேஜ் வந்த செல்போன் அலைக்கற்றையை டிரேஸ் செய்தனர். அப்போது அந்த செல்போன் தனுயாவுடையது என்று தெரிந்தது. இதையடுத்து செல்போன் சிக்னல் வந்த காரை பின் தொடர்ந்த பொலிசார் செல்போனை பறிமுதல் செய்து ஜோஸ் மற்றும் அவரது மனைவியிடம் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறியுள்ளனர். அதன் பின்னர் யாரெல்லாம் உங்களுடன் பயணம் செய்தனர் என்று கேட்டனர்.

அதற்கு தனுயா, கோகுல் இருந்ததாக தெரிவித்தார். இதையடுத்து போலிசார் கோகுலை அழைத்து விசாரித்தபோது, ஜோசை மாட்டி விடுவதற்காக, செல்போனை காரில் மறைத்து வைத்ததை ஒப்புகொண்டார்.

இந்நிலையில் கோகுல் இந்த வழக்கில் பல்வேறு குற்றச்செயல்களை புத்திசாலி தனமாக செய்துள்ளதாகவும் கொலை வழக்கு, வெடிகுண்டு மிரட்டல் வழக்குகளுக்காக கோகுல் ஏராளமான சித்துவேலைகள் மற்றும் கிரிமினல் மூளையை பயன்படுத்தியிருக்கிறார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரை பற்றி விசாரிக்க அவரது சொந்த ஊரான கேரளாவுக்கு பொலிசார் செல்லவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum