Top posting users this month
No user |
கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய ராஜபக்ச குடும்பம்
Page 1 of 1
கறுப்பு பணத்தை வெள்ளையாக்கிய ராஜபக்ச குடும்பம்
ராஜபக்ச குடும்பத்தினர் மோசடியான முறையில் கொள்ளையிட்டதாக கூறப்படும் பொதுமக்களின் பணத்தில் பெரும் பகுதி சீசெல்ஸ் தீவுகளிலேயே இருப்பதாக தெரியவந்துள்ளது.
சீசெல்ஸ் தீவுகளில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இலங்கை வங்கி கிளையின் ஊடாக ராஜபக்சவினரின் கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதாக காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு குறித்து நடத்திய விசாணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய ஆவணங்களை பெற்றுக்கொள்ளவும் வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை பெற நிதி மோசடி விசாரணைப் பிரிவு கேட்டை நீதவான் நீதிமன்றத்தில் பீ. அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
சீசெல்ஸ் நாட்டில் இலங்கை வங்கியின் கிளையை திறப்பதற்கான எந்த நியாயமான தேவைகளும் இருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து அதிகளவில் பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக பண பரிமாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அறியகிடைத்துள்ளது.
இதனடிப்படையில் ராஜபக்ச குடும்பத்தினர் இந்த இலங்கை வங்கி கிளையை கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக நடத்தி வந்துள்ளதாகவும் இதன் மூலம் அவர்கள் எப்படி பணத்தை சம்பாதித்தனர் என்ற தகவல்கள் வெளியா வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை தவிர மிஹின் லங்கா விமான நிறுவனம் சீசெல்ஸ் நாட்டுக்கு நடத்திய சேவையில் பயணம் செய்த பயணிகள் பற்றிய விபரங்கள் குறித்தும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக அங்குள்ள இலங்கை வங்கியின் கிளை அதிகாரிகளும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.
சீசெல்ஸ் தீவுகளில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட இலங்கை வங்கி கிளையின் ஊடாக ராஜபக்சவினரின் கறுப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டுள்ளதாக காவற்துறையின் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாடு குறித்து நடத்திய விசாணைகளில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய ஆவணங்களை பெற்றுக்கொள்ளவும் வங்கி கணக்கு வைத்துள்ளவர்களின் விபரங்களை பெற்றுக்கொள்ளவும் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்த அனுமதியை பெற நிதி மோசடி விசாரணைப் பிரிவு கேட்டை நீதவான் நீதிமன்றத்தில் பீ. அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
சீசெல்ஸ் நாட்டில் இலங்கை வங்கியின் கிளையை திறப்பதற்கான எந்த நியாயமான தேவைகளும் இருக்கவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனினும் வங்கி ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து அதிகளவில் பண பரிமாற்றங்கள் நடந்துள்ளதாக பண பரிமாற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணையில் அறியகிடைத்துள்ளது.
இதனடிப்படையில் ராஜபக்ச குடும்பத்தினர் இந்த இலங்கை வங்கி கிளையை கறுப்பு பணத்தை வெள்ளையாக்குவதற்காக நடத்தி வந்துள்ளதாகவும் இதன் மூலம் அவர்கள் எப்படி பணத்தை சம்பாதித்தனர் என்ற தகவல்கள் வெளியா வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை தவிர மிஹின் லங்கா விமான நிறுவனம் சீசெல்ஸ் நாட்டுக்கு நடத்திய சேவையில் பயணம் செய்த பயணிகள் பற்றிய விபரங்கள் குறித்தும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக அங்குள்ள இலங்கை வங்கியின் கிளை அதிகாரிகளும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum