Top posting users this month
No user |
Similar topics
லக்குமணனின் உயிரைக் காத்த சமய சஞ்சீவி மூலிகை இன்றும் உள்ளது: வரலாற்று ஆய்வாளர் தகவல்
Page 1 of 1
லக்குமணனின் உயிரைக் காத்த சமய சஞ்சீவி மூலிகை இன்றும் உள்ளது: வரலாற்று ஆய்வாளர் தகவல்
ராமாயணத்தில் லக்குமணனின் உயிரைக் காத்த சமய சஞ்சீவி மூலிகை இன்றும் உள்ளது என்று வரலாற்று ஆய்வாளர் தொ. பரமசிவன் தெரிவித்துள்ளார்.
பசுமைநடை என்ற அமைப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சின்னங்கள், மலைகள், சமணர் படுகைகளுக்கு மாதம் ஒருமுறை அழைத்துச் செல்கிறது.
இந்த பசுமை நடையின் 50-வது நிகழ்வு மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடியில் நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் பேசுகையில், ஆ என்ற வார்த்தைக்கு முதல் பொருளே தண்ணீர் தான்.
ஆலங்கட்டி மழை என்ற வார்த்தையைக் கொண்டே இதைப் புரிந்து கொள்ளலாம்.
தண்ணீர் இல்லாத இடங்களில் பெரிய கோயில்களைக் கட்ட மாட்டார்கள்.
பாழடைந்து போன பழமையான கோயில்களில் உள்ள கிணறுகளில், இன்றைக்கும் கூட தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு காரணம் அது தான்.
நிலத்தடி நீரை கண்டுபிடிப்பதில் முன்னோரின் அறிவுத் திறன் அளப்பரியது.
ஆனால் நாம் சுற்றியுள்ள உயிர்களையும், பயிர்களையும் தெரிந்துகொள்ளக்கூட ஆர்வம் காட்டுவதில்லை.
ராமாயணத்தில் போர்க் களத்தில் மயக்கமடைந்த லக்குமணனை காப்பாற்றுவதற்காக சமய சஞ்சீவி மூலிகையைத் தேடி ஹனுமன் சென்றதாகவும், மூலிகையைக் கண்டறிய முடியாமல் மலையையே தூக்கி வந்ததாகவும் நாம் படித்திருக்கிறோம். அந்த மூலிகை இப்போதும் தமிழகத்தில் உள்ளது.
ராஜநாக கடிக்கு மருந்து:
சித்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் வேப்பமரத்தில் வளர்ந்த ஒரு கொடியைக் காட்டினார்.
மண்ணோடு தொடர்பின்றி தண்ணீரும் இல்லாமல் மரத்தில் இருந்தே அந்தக் கொடி வளர்ந்திருந்தது.
நாம் சீந்தில் கொடி என்று அழைக்கிற மூலிகையின் பெயர்தான் சமயசஞ்சீவி.
தேள் கடிக்கு மருந்து:
1977-ம் ஆண்டில் அழகர்கோவிலை பற்றி ஆய்வு செய்யச் சென்றபோது, தேள்கடி மருந்து என்று 10 பைசாவுக்கு 3 கொட்டைகளை மாடு மேய்க்கும் சிறுவர்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
நம்பிக்கையில்லாமல் வாங்கிச் சென்றேன். மறுநாள் ஒரு அம்மா தேள் கடித்து விட்டது என்று அலறிக்கொண்டே வீதியில் ஓடி வந்தார்.
ஆமணக்கு விதை போல இருந்த அந்தக் கொட்டையில் ஒன்றை லேசாக உடைத்து, அவரது கடிவாயில் வைத்தேன். 5 மணித் துளிகளில் தேள்கடி குணமாகிவிட்டது.
நம் முன்னோர்களின் இதுபோன்ற அறிவுத்திரட்டை எல்லாம் தொலைத்துவிட்டோம்.
தொலைப்பதற்குத் தான் நமக்கு தகுதி இருக்கிறதா? முன்னோர்களின் அறிவுத் திரட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் இறங்க வேண்டும் என்றார்.
பசுமைநடை என்ற அமைப்பு சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, மதுரையைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சின்னங்கள், மலைகள், சமணர் படுகைகளுக்கு மாதம் ஒருமுறை அழைத்துச் செல்கிறது.
இந்த பசுமை நடையின் 50-வது நிகழ்வு மதுரை நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள கீழக்குயில்குடியில் நேற்று நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் பேசுகையில், ஆ என்ற வார்த்தைக்கு முதல் பொருளே தண்ணீர் தான்.
ஆலங்கட்டி மழை என்ற வார்த்தையைக் கொண்டே இதைப் புரிந்து கொள்ளலாம்.
தண்ணீர் இல்லாத இடங்களில் பெரிய கோயில்களைக் கட்ட மாட்டார்கள்.
பாழடைந்து போன பழமையான கோயில்களில் உள்ள கிணறுகளில், இன்றைக்கும் கூட தண்ணீர் வற்றாமல் இருப்பதற்கு காரணம் அது தான்.
நிலத்தடி நீரை கண்டுபிடிப்பதில் முன்னோரின் அறிவுத் திறன் அளப்பரியது.
ஆனால் நாம் சுற்றியுள்ள உயிர்களையும், பயிர்களையும் தெரிந்துகொள்ளக்கூட ஆர்வம் காட்டுவதில்லை.
ராமாயணத்தில் போர்க் களத்தில் மயக்கமடைந்த லக்குமணனை காப்பாற்றுவதற்காக சமய சஞ்சீவி மூலிகையைத் தேடி ஹனுமன் சென்றதாகவும், மூலிகையைக் கண்டறிய முடியாமல் மலையையே தூக்கி வந்ததாகவும் நாம் படித்திருக்கிறோம். அந்த மூலிகை இப்போதும் தமிழகத்தில் உள்ளது.
ராஜநாக கடிக்கு மருந்து:
சித்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் வேப்பமரத்தில் வளர்ந்த ஒரு கொடியைக் காட்டினார்.
மண்ணோடு தொடர்பின்றி தண்ணீரும் இல்லாமல் மரத்தில் இருந்தே அந்தக் கொடி வளர்ந்திருந்தது.
நாம் சீந்தில் கொடி என்று அழைக்கிற மூலிகையின் பெயர்தான் சமயசஞ்சீவி.
தேள் கடிக்கு மருந்து:
1977-ம் ஆண்டில் அழகர்கோவிலை பற்றி ஆய்வு செய்யச் சென்றபோது, தேள்கடி மருந்து என்று 10 பைசாவுக்கு 3 கொட்டைகளை மாடு மேய்க்கும் சிறுவர்கள் விற்றுக் கொண்டிருந்தார்கள்.
நம்பிக்கையில்லாமல் வாங்கிச் சென்றேன். மறுநாள் ஒரு அம்மா தேள் கடித்து விட்டது என்று அலறிக்கொண்டே வீதியில் ஓடி வந்தார்.
ஆமணக்கு விதை போல இருந்த அந்தக் கொட்டையில் ஒன்றை லேசாக உடைத்து, அவரது கடிவாயில் வைத்தேன். 5 மணித் துளிகளில் தேள்கடி குணமாகிவிட்டது.
நம் முன்னோர்களின் இதுபோன்ற அறிவுத்திரட்டை எல்லாம் தொலைத்துவிட்டோம்.
தொலைப்பதற்குத் தான் நமக்கு தகுதி இருக்கிறதா? முன்னோர்களின் அறிவுத் திரட்டுகளை மீட்டெடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் இறங்க வேண்டும் என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முஸ்லிம் காங்கிரஸ் யாருடன் உள்ளது என்பது புரியாத விடயமாகவே உள்ளது: ஜனா மா.உ
» தாய் சேய் நலம் காக்க ”அம்மா மகப்பேறு சஞ்சீவி”: முதல்வரின் நலத்திட்டங்கள்
» ஸ்ரீ ஏரி காத்த ராமர்
» தாய் சேய் நலம் காக்க ”அம்மா மகப்பேறு சஞ்சீவி”: முதல்வரின் நலத்திட்டங்கள்
» ஸ்ரீ ஏரி காத்த ராமர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum