Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பட்டர் சிக்கன்

Go down

பட்டர் சிக்கன்                      Empty பட்டர் சிக்கன்

Post by oviya Sat Aug 08, 2015 2:10 pm

சிக்கன் - ஒரு கிலோ
இஞ்சி - இரண்டு அங்குலத்துண்டு
பூண்டு - ஆறு பற்கள்
பச்சைமிளகாய் - நான்கு
பெரிய தக்காளி - நான்கு
பெரிய வெங்காயம் - ஒன்று
வெண்ணெய் - கால் கோப்பை
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
பாதாம் பருப்பு - ஒரு பிடி
பால் - அரைக்கோப்பை
கரம் மசாலா - இரண்டு தேக்கரண்டி
மிளகாய்தூள் - இரண்டு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்தூள் - ஒரு தேக்கரண்டி
தந்தூரி பவுடர் - ஒரு மேசைக்கரண்டி
எலுமிச்சைரசம் - ஒரு மேசைக்கரண்டி
உப்புத்தூள் - மூன்றுதேக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு பிடி
கெட்டியான க்ரீம் - இரண்டு மேசைக்கரண்டி


கோழித்துண்டுகளை நன்கு கழுவி ஈரம் போக நன்கு ஒத்தி எடுக்கவும்.
வெங்காயத்தை நொறுங்க நறுக்கி வைக்கவும். தக்காளியை வில்லைகளாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு தண்ணீர் சுண்ட வதக்கி வைக்கவும்.
பாதாம் பருப்பை சுடு தண்ணீரில் ஊற வைத்து பாலைச் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
இஞ்சி பூண்டு பச்சைமிளகாயை நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதில் ஒரு தேக்கரண்டி விழுதை தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு தந்தூரி பவுடர், ஒரு தேக்கரண்டி உப்புத்தூள், எடுத்து வைத்த இஞ்சி பூண்டு விழுது, மற்றும் எலுமிச்சைரசத்தையும் சேர்த்து கோழித்துண்டில் சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு அவனில் 400 டிகிரி F ல் வைத்து கோழித்துண்டுகளை கிரில் செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு வாயகன்ற அடிகனமான சட்டியை காயவைத்து எண்ணெயையும் வெண்ணெய்யையும் போட்டு சூடாக்கவும். அதில் வெங்காயத்தைப் போட்டு நன்கு வறுக்கவும். பிறகு இஞ்சி பூண்டு கலவையை போட்டு வதக்கவும். அடிபிடிக்காமல் தண்ணீர் தெளித்து நன்கு வதக்கவும்.
பிறகு தக்காளி விழுதைப் போட்டு வதக்கி எல்லாத்தூளையும் போட்டு பச்சைவாசனை போகும் வரை வதக்கவும். பின்பு அதில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதித்தவுடன் கோழித்துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி விட்டு உப்புத்தூளை போட்டு நன்கு கலக்கவும்.
பிறகு பாதாம் விழுதை சிறிது நீரைச் சேர்த்து கலக்கி மசாலாவில் ஊற்றி நன்கு கலக்கி அடுப்பின் அனலை மிகவும் குறைத்து வைத்து வேகவிடவும்.
மசாலா நன்கு வெந்து கெட்டியான பதம் வந்தவுடன் இறக்கி விடவும்.
பரிமாறும் முன் இரண்டு மேசைக்கரண்டி கெட்டியான கிரீமை மேலாக ஊற்றி கொத்தமல்லியை தூவி சூடாக பரிமாறவும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum