Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம்

Go down

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம் Empty சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு! இதுவரை 15 பேர் பலி 12 பேர் மாயம்

Post by oviya Sat Dec 27, 2014 12:38 pm

நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலையால் இதுவரை 15 பேர் உயிரிழந்தனர் என்றும், 12 பேர் காணாமல் போயிருக்கின்றனர் என்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது.
அத்துடன் 9 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் மட்டும் பல மாவட்டங்களிலும் தொடரும் அனர்த்தப் பாதிப்புக்களால் 17 ஆயிரத்து 200 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதடைந்தன என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் பதுளை, ரில்பொல பிரதேசங்களில் இடம்பெற்ற மண்சரிவுகளில் 15 பேர் உயிரிழந்தனர் என்றும் 12 பேரைக் காணவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு

சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழக்கை பாதிப்பு அடைந்துள்ளது. குறிப்பாக மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

இதேவேளை, மண்சரிவு, மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையால் பல பிரதான வீதிகளின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

கண்டி வத்தேகம பம்பரல்ல பிரதான வீதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால் வீதியுடனான போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது. தற்போது வழமைக்கு மாறியுள்ளது.

மேலும், ஹட்டன் நுவரெலியா வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டிருந்தது.

இதனிடையே, பதுளை , பசறை பிரதான வீதியில் ஆறாம் கட்டை பகுதியில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையாலும் பசறை மடுல்சீமை – எக்கிரிய வீதியில் மண்சரிவு ஏற்ட்டமையாலும் பல மணி நேரம் போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இதேவேளை, மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ள 11 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் மண்சரிவு, கற்பாறை புரள்வுகள் ஏற்படக்கூடிய அபாயம் நிலவியுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஹட்டன் , நுவரெலியா மற்றும் பதுளை மஹியங்கனை ஆகிய பகுதிகளில் வீதிகளில் மண்சரிவு அபாயம் நிலவுவதால் மிக அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையினால் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவிக்கின்றது. களனி கங்கை மற்றும் நில்வளா கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

களனிகங்கையின் நாகலகம்வீதிய நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் மூன்று தசம் 2 அடி வரை உயர்ந்துள்ளது.

அனர்த்த அபாய எச்சரிக்கை தொடர்பில், களினி கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

இதேவேளை, மவுஸாக்கலை, காசல்ரீ, கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், காசல் ரீ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

மவுஸாக்கலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என அதிகாரிகள் மேலும் தெரிவிக்கின்றனா்.

இதனால் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிக்கக்கூடுமெனவும், கங்கையின் இரு மருங்கிலும் உள்ளவர்களை பாதுகாப்பாக இருக்குமாறும் இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

கொழும்பு – குருநாகல் வீதியின் ஐந்தாம், ஆறாம் பிரிவுகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மேலும், நுவரெலியா நகருக்குள் பிரவேசிக்கும் பிரதான வீதிகள் சிலவற்றில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து
தடைப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி குமாரசிறி குறிப்பிட்டார்.

எட்டியாந்தோட்டை பிரதேசங்களின் 53 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதேவேளை, மண்மேடு சரிந்து விழுதல் மற்றும் கற்பாறைகள் உடைந்து விழுதல் காரணமாக, பதுளையில் இருந்து, பஸ்ஸர, மகியங்கனை, வெலிமடை மற்றும் பண்டாரவளை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை, நாவுல, நாலந்தா நீர்த்தேக்கத்தின் மட்டத்தில் இருந்து 03 அடிக்கு மேலாக நீர் வெளியேற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் 27 வருடங்களின் பின்னர் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும், அதனால் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

கல்கந்த பகுதியில் வீடொன்றின் மீது, மற்றுமொரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹெகொட பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில், இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பஹலகம பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளார். பதுளை – மகியங்கனை வீதியின், சிறிகெத்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் மற்றுமொரு பெண் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனா்.

இதேவேளை, வேவல்ஹிண்ண ரில்பொல – மெதகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் வீடுகள் சிலவற்றுக்கு பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தத்தில் 10 பேர் காணாமல் போயுள்ளதாகவும் காணாமல் போனவர்களில் இரண்டு பெண்களும், 5 சிறுவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே பண்டாரவளை நாயபெத்த நடுகணக்கு பகுதியில் மண்சரிவு அபாயம் காரணமாக 60 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளாதக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மண்சரிவில் சிக்கி காணாமற்போனவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இராணுவம், பொலிஸார், பிரதேசவாசிகள் ஈடுபட்டிருக்கின்றனா்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum