Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


21 பேர் பலி! 15 பேர் மாயம்: நாட்டில் தொடரும் மழை- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பதுளைக்குச் சென்றார் மகிந்த

Go down

21 பேர் பலி! 15 பேர் மாயம்: நாட்டில் தொடரும் மழை- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பதுளைக்குச் சென்றார் மகிந்த Empty 21 பேர் பலி! 15 பேர் மாயம்: நாட்டில் தொடரும் மழை- பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க பதுளைக்குச் சென்றார் மகிந்த

Post by oviya Sun Dec 28, 2014 1:07 pm

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளதோடு, 15 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்தை தாண்டுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடகப் பேச்சாளர் சரத் லால்குமார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டுக்கு அருகில் நிலைகொண்டுள்ள தாழமுக்கநிலை காரணமாக மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க ஜனாதிபதி பதுளை சென்றார்

பதுளை மாவட்டத்தில் நிலச்சரிவு மற்றும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அந்த மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

இன்று காலை ஜனாதிபதி அங்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

கண்டி பிரதேசத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரத்தை இரத்து செய்து விட்டு பதுளை சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவிக்கின்றது.

பதுளை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதா என்பதனை அறிந்து கொள்ளவதன் நோக்கத்துடனே ஜனாதிபதி பதுளை சென்றிருப்பதாக கூறப்படுகின்றது.

அனுராதபுரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்திக்க ஜனாதிபதி நேற்றைய தினம் அனுராதபுரம் சென்றிருந்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum