Top posting users this month
No user |
Similar topics
தமிழகத்தில் தடுமாறும் மதுக் கொள்கை: என்று விடியும்?
Page 1 of 1
தமிழகத்தில் தடுமாறும் மதுக் கொள்கை: என்று விடியும்?
மது விற்பனையால் எவ்வளவு வருமானம் அரசுக்கு கிடைக்கிறதோ அதைவிட பல மடங்கான பிரச்சனைகளும் தலைவலியும் அரசுக்கு அதனாலேயே ஏற்படுகிறது.
கடந்த திமுக ஆட்சியில்தான் மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனாலும், இன்றைய அதிமுக ஆட்சியில்தான் டாஸ்மாக் கடைகள் அளவுக்கு அதிகமாக வருமானத்துக்காக திறக்கப்பட்டன.
அரசு வருமானத்தில் 15 சதவீதத்துக்கு மேல் மது விற்பனையை நம்பியுள்ளது.
அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என எல்லா நல திட்டங்களுக்கும் முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும் அம்மா பெயர் வைக்கப்பட்டது.
சிறிய பேருந்தில் கூட இரட்டை இலை வரையப்பட்டிருப்பதாக, திமுகவால் சர்ச்சையும் எழுப்பப்பட்டது.
ஆனால், மதுக்கடைகளுக்கு மட்டும் அம்மா என்ற பெயரோ கட்சியின் அடையாளமோ வைக்காததிலிருந்து இது தவறான கொள்கை, மக்கள் விரோத செயல்தான் என்பதை தலைமை உள்ளிட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
விபத்து மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவது, இலவசங்கள் கொடுப்பது, நல திட்டங்களை அதிகமாக அறிவிப்பது எல்லாமே இந்த மதுவிற்பனையால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை ஈடுகட்டும் முயற்சியாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
பெருகிவரும் மதுக்கடைகளால் இளைஞர்கள் சீரழியும் விகிதம் அதிகரித்திருப்பதோடு, சாலை விபத்துகள், பாலியல் குற்றங்கள், ஒன்றாக மது அருந்துபவர்களுக்குள்ளே ஏற்படும் நிதானம் இல்லாத சண்டையில் நடக்கும் திடீர் கொலைகள் என பல பிரச்சனைகள் தொடர்கின்றன.
ஒரு குடிகாரனாக வீட்டுக்கோ, சமுதாயத்துக்கோ தொல்லையில்லாமல் இருந்தால் அந்த ஒரு சிலர் விதிவிலக்குதான்.
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்ப காலத்திலிருந்தே மதுவுக்கு உறுதியான தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தாலும் சமீபத்தில், அன்புமணி முதல்வராக வந்தால் அவர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் என்றார்.
மதுவுக்கு எதிராக வைகோ நடைபயணமே சென்றார், விஜயகாந்தின் குடிப்பழக்கத்தை ஜெயலலிதாவும் கருணாநிதியுமே விமர்சித்தாலும் விஜயகாந்தும் டாஸ்மக்கை மூடவே குரல் கொடுத்து வந்தார்.
ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி. ராமகிருஷ்ணன் என அரசியலில் பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
தமிழகத்தின் பல இடங்களில் மக்களே ஒன்று சேர்ந்து பொது இடங்களில் உள்ள கடைகளை மூடச்சொல்லியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய இணையதள முகநூல்களில் பரவும், குழந்தைகளை இளைஞர்கள் மது அருந்த வைப்பதும் காதல் தோல்வி என்று +1 மாணவி டாஸ்மாக்கிலே குடித்துவிட்டு கலாட்டா செய்வதும் இரண்டு மூதாட்டிகள் போட்டிபோட்டு மது அருந்துவதும் சமுதாயத்தின் போக்கு மதுக்கடைகளால் ஆபத்தாகிவிட்டது என்பதையே காட்டுகின்றன.
இந்நிலையில், வரும் தேர்தலை கணித்து தான் திமுக தலைவர் கருணாநிதியும் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டுவரும் என அறிவித்துள்ளார்.
இது பாமகவின் முதல்வர் முயற்சிக்கு இடையூறானதால் கருணாநிதியை சபிக்கப்பட்டவர் என்று சொல்லி ராமதாஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஆளுங்கட்சியான அதிமுகவும் பல நல்ல திட்டங்களுக்கு மத்தியில் தனது ஆட்சிக்கு அவப்பெயராக, டாஸ்மாக் இருப்பதால் அதை மூடிவிடலாம் என்ற யோசனையில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
தமிழகத்தில் மதுவிலக்கு பல காலகட்டங்களிலும் இருந்துவந்துள்ளது. அண்ணா ஆட்சியில் (1967) மதுவிலக்கு கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு வந்த கருணாநிதியின் ஆட்சியிலும் பின்பற்றப்பட்டது.
பிறகு, அதிகமான கள்ளச்சாராய உயிர் பலியால் மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, மதுவின் தீங்கு குறித்து, கடுமையான பிரச்சாரமும் செய்யப்பட்டது. பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.
எப்படியும் குடித்தே தீருவோம் என்ற குடிகாரர்கள் இருக்கும் வரை மது விற்பனையும் பிரச்சனைதான், மது விலக்கும் பிரச்சனைதான்.
சரியான அணுகுமுறையோடு எந்த ஆட்சியாவது மதுவிலக்கை அமல்படுத்தினால் தான் தமிழகத்துக்கு நல்ல எதிர்காலம் விடியும்.
கடந்த திமுக ஆட்சியில்தான் மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. ஆனாலும், இன்றைய அதிமுக ஆட்சியில்தான் டாஸ்மாக் கடைகள் அளவுக்கு அதிகமாக வருமானத்துக்காக திறக்கப்பட்டன.
அரசு வருமானத்தில் 15 சதவீதத்துக்கு மேல் மது விற்பனையை நம்பியுள்ளது.
அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா குடிநீர் என எல்லா நல திட்டங்களுக்கும் முதல்வர் ஜெயலலிதாவை குறிக்கும் அம்மா பெயர் வைக்கப்பட்டது.
சிறிய பேருந்தில் கூட இரட்டை இலை வரையப்பட்டிருப்பதாக, திமுகவால் சர்ச்சையும் எழுப்பப்பட்டது.
ஆனால், மதுக்கடைகளுக்கு மட்டும் அம்மா என்ற பெயரோ கட்சியின் அடையாளமோ வைக்காததிலிருந்து இது தவறான கொள்கை, மக்கள் விரோத செயல்தான் என்பதை தலைமை உள்ளிட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்.
விபத்து மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்குவது, இலவசங்கள் கொடுப்பது, நல திட்டங்களை அதிகமாக அறிவிப்பது எல்லாமே இந்த மதுவிற்பனையால் ஏற்படும் குற்ற உணர்ச்சியை ஈடுகட்டும் முயற்சியாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
பெருகிவரும் மதுக்கடைகளால் இளைஞர்கள் சீரழியும் விகிதம் அதிகரித்திருப்பதோடு, சாலை விபத்துகள், பாலியல் குற்றங்கள், ஒன்றாக மது அருந்துபவர்களுக்குள்ளே ஏற்படும் நிதானம் இல்லாத சண்டையில் நடக்கும் திடீர் கொலைகள் என பல பிரச்சனைகள் தொடர்கின்றன.
ஒரு குடிகாரனாக வீட்டுக்கோ, சமுதாயத்துக்கோ தொல்லையில்லாமல் இருந்தால் அந்த ஒரு சிலர் விதிவிலக்குதான்.
பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்ப காலத்திலிருந்தே மதுவுக்கு உறுதியான தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தாலும் சமீபத்தில், அன்புமணி முதல்வராக வந்தால் அவர் போடும் முதல் கையெழுத்து மதுவிலக்கை அமல்படுத்துவதுதான் என்றார்.
மதுவுக்கு எதிராக வைகோ நடைபயணமே சென்றார், விஜயகாந்தின் குடிப்பழக்கத்தை ஜெயலலிதாவும் கருணாநிதியுமே விமர்சித்தாலும் விஜயகாந்தும் டாஸ்மக்கை மூடவே குரல் கொடுத்து வந்தார்.
ஜி.கே. வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜி. ராமகிருஷ்ணன் என அரசியலில் பல தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.
தமிழகத்தின் பல இடங்களில் மக்களே ஒன்று சேர்ந்து பொது இடங்களில் உள்ள கடைகளை மூடச்சொல்லியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய இணையதள முகநூல்களில் பரவும், குழந்தைகளை இளைஞர்கள் மது அருந்த வைப்பதும் காதல் தோல்வி என்று +1 மாணவி டாஸ்மாக்கிலே குடித்துவிட்டு கலாட்டா செய்வதும் இரண்டு மூதாட்டிகள் போட்டிபோட்டு மது அருந்துவதும் சமுதாயத்தின் போக்கு மதுக்கடைகளால் ஆபத்தாகிவிட்டது என்பதையே காட்டுகின்றன.
இந்நிலையில், வரும் தேர்தலை கணித்து தான் திமுக தலைவர் கருணாநிதியும் திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை கொண்டுவரும் என அறிவித்துள்ளார்.
இது பாமகவின் முதல்வர் முயற்சிக்கு இடையூறானதால் கருணாநிதியை சபிக்கப்பட்டவர் என்று சொல்லி ராமதாஸ் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
ஆளுங்கட்சியான அதிமுகவும் பல நல்ல திட்டங்களுக்கு மத்தியில் தனது ஆட்சிக்கு அவப்பெயராக, டாஸ்மாக் இருப்பதால் அதை மூடிவிடலாம் என்ற யோசனையில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
தமிழகத்தில் மதுவிலக்கு பல காலகட்டங்களிலும் இருந்துவந்துள்ளது. அண்ணா ஆட்சியில் (1967) மதுவிலக்கு கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு வந்த கருணாநிதியின் ஆட்சியிலும் பின்பற்றப்பட்டது.
பிறகு, அதிகமான கள்ளச்சாராய உயிர் பலியால் மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர். ஆட்சியிலும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு, மதுவின் தீங்கு குறித்து, கடுமையான பிரச்சாரமும் செய்யப்பட்டது. பிறகு தாக்குப்பிடிக்க முடியாமல் மதுவிலக்கு விலக்கிக்கொள்ளப்பட்டது.
எப்படியும் குடித்தே தீருவோம் என்ற குடிகாரர்கள் இருக்கும் வரை மது விற்பனையும் பிரச்சனைதான், மது விலக்கும் பிரச்சனைதான்.
சரியான அணுகுமுறையோடு எந்த ஆட்சியாவது மதுவிலக்கை அமல்படுத்தினால் தான் தமிழகத்துக்கு நல்ல எதிர்காலம் விடியும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது!- மனோ கணேசன்
» தடுமாறும் ஓடங்கள்
» சைவ சித்தாந்தத்தில் ஆன்மக் கொள்கை
» தடுமாறும் ஓடங்கள்
» சைவ சித்தாந்தத்தில் ஆன்மக் கொள்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum