Top posting users this month
No user |
Similar topics
துவரன் இட்லி உப்புமா
Page 1 of 1
துவரன் இட்லி உப்புமா
இட்லி அரிசி - அரை டம்ளர்
துவரம் பருப்பு - கால் டம்ளர்
பச்சை மிளகாய்- மூன்று
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - ஒன்று
தாளிக்க:
கடுகு
உளுந்து
கடலைபருப்பு
Ads by Block The AdsAd Options
தேவையான பொருட்களை தயார் செய்து கொள்ளவும். பச்சை மிளகாயை மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
அரிசியையும், பருப்பையும் தனித்தனியே மூன்று மணி நேரம் ஊற விடவும்.
இரண்டையும் தனித்தனியாக இட்லி மாவு பதத்திற்கு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவை ஒரு நாள் முழுக்க, இரவோ (அ) பகல் முழுவதுமோ புளிக்க விடவும். பின் அதை ஒரு பாத்திரத்திலோ இட்லி தட்டிலோ ஊற்றி ஆவியில் வேகவிடவும்.
வேக வைத்ததை ஆற விட்டு உதிர்த்து கொள்ளவும். உதிர்க்கும் போது கையில் ஒட்டாமல் இருக்க எண்ணெய் தொட்டு தொட்டு உதிர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்து அரைத்த பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், உதிர்த்த இட்லியை அதில் போட்டு நன்கு கலக்கவும்.
சுவையான துவரை இட்லி உப்புமா தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum