Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் கட்சி: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும்!

Go down

விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் கட்சி: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும்! Empty விடுதலைப் புலிகளின் புதிய அரசியல் கட்சி: இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு வழிவகுக்கும்!

Post by oviya Sun Jul 05, 2015 2:42 pm

இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் புதிய அரசியல் கட்சி தொடங்கியதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஆகஸ்ட் 17ம் திகதி நடக்கவுள்ளது.

இந்நிலையில், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இலங்கையில் நேற்று முன்தினம் ஒன்று கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர்.

இதில், ‘ஜனநாயக போராளிகள் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தனர்.

இதை தமிழக மற்றும் இலங்கையைச் சார்ந்த அரசியல் தலை வர்கள், விமர்சகர்கள் வரவேற்றுள்ளனர்.

இலங்கை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் கூறுகையில், முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம். புதிய அரசியல் கட்சி தொடங்கியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது.

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கூறுகையில், புதிதாக கட்சி தொடங்கியிருப்பவர்களின் பின்னணி குறித்து எனக்கு தெரியவில்லை.

எனினும், சிறிசேனா, சந்திரிகா குமாரதுங்கா, ராஜபக்ச என சிங்களர்கள் அனைவரும் ஒன்றாக இணைகின்றனர்.

இந்த சூழலில் தமிழர்களும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

முன்னாள் போராளிகள் மட்டுமின்றி, தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையுடன் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும்.

அப்போதுதான், தமிழர்கள் இல்லாமல் சிங்களர்கள் ஆட்சி அதிகாரத்தை பெற முடியாது என்கிற நிலை உருவாகும்.

அதன் மூலம்தான் இலங்கையில் தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

புலம்பெயர்ந்த இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி கூறுகையில், பிரபாகரன் ஜனநாயக ரீதியான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் எல்லாம் விரும்பினோம்.

ஜனநாயகத் தன்மை இல்லாததால்தான் அந்த இயக்கம் பலவீனம் அடைந்தது.

இந்நிலையில் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் சிலரது முயற்சியில் ஜனநாயக ரீதியான அரசியல் இயக்கம் உருவாகியுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. இது வரவேற்கத்தக்கது.

அந்த அரசியல் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் வெற்றி எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறுகையில், தந்தை செல்வா ஜனநாயக அரசியலைதான் முன்னெடுத்தார். அகிம்சை வழியில் போராடியவர்கள் ஆயுத தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டனர்.

அதன் விளைவாகவே தமிழர்கள் கையில் ஆயுதங்கள் திணிக்கப்பட்டன.

இன்றைக்கு இலங்கையில் தமிழர்கள் பெருமளவில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் ஜனநாயகவழிப் போராட்டம்தான் தமிழர்களின் விடியலுக்கான கடைசி அஸ்திரம்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய கட்சி தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.

எந்த அரசியல் அதிகாரம் தமிழர்களை அழித்ததோ, அந்த அதிகாரத்தை பெற்று சிறப்புடன் வாழ ஜனநாயக போராட்டம் முக்கியமானது.

இயக்கம் தொடங்கிவிட்டு அவர் துரோகி, இவர் துரோகி என்று குறை கூறாமல், அதை சரியாக முன்னெடுத்தால் மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum