Top posting users this month
No user |
பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் மரணம்- வாகன விபத்தில் ஒருவர் பலி
Page 1 of 1
பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் மரணம்- வாகன விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலைக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் ஒருவர் விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்துள்ளார்.
குறித்த கடற்படை வீரர் பயிற்சியின் போது பயணித்த படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடலுக்குள் விழுந்த சந்தர்ப்பத்தில் குறித்த கடற்படை வீரர் படகின் இன்ஜினுக்குள் அகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதுரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாகன விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை, மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூதூர் நோக்கி பயணித்த லொரியுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஒன்று மோதியதினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் சைக்களின் ஓட்டுனர் முத்தூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 38 வயதுடைய பஹல்தோப்புவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் லோரி வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்வபம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த கடற்படை வீரர் பயிற்சியின் போது பயணித்த படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கடலுக்குள் விழுந்த சந்தர்ப்பத்தில் குறித்த கடற்படை வீரர் படகின் இன்ஜினுக்குள் அகப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதுரலிய பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ் மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் கடற்படைப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
வாகன விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை, மட்டக்களப்பு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூதூர் நோக்கி பயணித்த லொரியுடன் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் ஒன்று மோதியதினாலே இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் சைக்களின் ஓட்டுனர் முத்தூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன் போது மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 38 வயதுடைய பஹல்தோப்புவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பில் லோரி வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்வபம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum