Top posting users this month
No user |
சுதந்திரக்கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி
Page 1 of 1
சுதந்திரக்கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிராமமட்ட ஆதரவாளர்களை கவரும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளார்.
இதன் முதல் கட்டமாக நாளை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியினர் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையிலேயே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கும் சுமார் 49 அரசியல் கட்சிகளும் குழுக்களும் கடந்த வியாழக்கிழமையன்று ஜனாதிபதியை சந்தித்தன.
இதனையடுத்து கிராம மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள சாதாரண மக்களை சந்திக்கும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால முன்னெடுத்துள்ளார்.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், அரசியல் அமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை காரணமாக ஸ்தம்பித்துள்ளன.
அரசியல் அமைப்பு சபை அமைக்கப்பட்டால் மாத்திரமே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும். இதன்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் அதிகாரத்தை பெறும்.
தற்போதைய நிலையில் அந்தக்குழு விசாரணை என்ற பெயரில் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவும் தமது நடவடிக்கைளில் அதிகாரங்கள் இன்றியே உள்ளதாக இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் முதல் கட்டமாக நாளை கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணியினர் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையிலேயே ஜனாதிபதி இந்த முடிவை எடுத்துள்ளார்.
மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கும் சுமார் 49 அரசியல் கட்சிகளும் குழுக்களும் கடந்த வியாழக்கிழமையன்று ஜனாதிபதியை சந்தித்தன.
இதனையடுத்து கிராம மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள சாதாரண மக்களை சந்திக்கும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால முன்னெடுத்துள்ளார்.
இதேவேளை நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், அரசியல் அமைப்பு சபைக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை காரணமாக ஸ்தம்பித்துள்ளன.
அரசியல் அமைப்பு சபை அமைக்கப்பட்டால் மாத்திரமே சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமிக்கப்படும். இதன்போது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் அதிகாரத்தை பெறும்.
தற்போதைய நிலையில் அந்தக்குழு விசாரணை என்ற பெயரில் வாக்குமூலத்தை பதிவு செய்யும் நடவடிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று மோசடி தடுப்பு பொலிஸ் பிரிவும் தமது நடவடிக்கைளில் அதிகாரங்கள் இன்றியே உள்ளதாக இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum