Top posting users this month
No user |
Similar topics
மட்டன் ஷம்மி கபாப்
Page 1 of 1
மட்டன் ஷம்மி கபாப்
மேல் மசாலாவுக்கு:
-----------------
கொத்துக்கறி (மட்டன்) - 1/2 கிலோ,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு - 10 பல்,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு:
-----------------
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் -4,
முந்திரி - 50 கிராம்,
வெண்ணெய் -1மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
பொரிக்க:
--------------
மைதா -1/4 கப்,
முட்டை - 2,
பிரட் கிரம்ஸ் - 2 கப்,
எண்ணெய் - தேவையான அளவு.
முந்திரியை பொடியாக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் வெண்ணெயை உருக்கி வெங்காயம் , பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், முந்திரி பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.
விழுதாக வந்ததும் இறக்கி, ஆறவிட்டு, சிறு சிறு (நெல்லிக்காயளவு) உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பூரணம் ரெடி.
வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
இறைச்சியை கழுவி தனியே வைக்கவும்.
பாத்திரத்தில் சிறிது எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், பட்டை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
கழுவிய இறைச்சி, உப்பு, மிளகாய் தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடலைப்பருப்பை அதனுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
கறி வெந்ததும், இறக்கி தண்ணீர் இருந்தால் வடித்து விட்டு, மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த கறியை ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, அதனுள் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பூரண உருண்டையை வைத்து மூடவும்.
முட்டையை உடைத்து, நன்கு அடித்து அதனுடன் மைதா, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.
எண்ணெயை காயவைத்து, செய்து வைத்திருக்கும் கபாப்களை முட்டையில் முக்கி, பிரட் கிரம்ஸில் நன்கு புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
-----------------
கொத்துக்கறி (மட்டன்) - 1/2 கிலோ,
கடலைப்பருப்பு - 50 கிராம்,
பெரிய வெங்காயம் - 2,
இஞ்சி - சிறு துண்டு,
பூண்டு - 10 பல்,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
பட்டை - சிறிது,
தேங்காய்த்துருவல் - 1 மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
பூரணத்துக்கு:
-----------------
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் -4,
முந்திரி - 50 கிராம்,
வெண்ணெய் -1மேசைக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு.
பொரிக்க:
--------------
மைதா -1/4 கப்,
முட்டை - 2,
பிரட் கிரம்ஸ் - 2 கப்,
எண்ணெய் - தேவையான அளவு.
முந்திரியை பொடியாக்கி வைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் வெண்ணெயை உருக்கி வெங்காயம் , பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், முந்திரி பொடி, உப்பு சேர்த்து கிளறவும்.
விழுதாக வந்ததும் இறக்கி, ஆறவிட்டு, சிறு சிறு (நெல்லிக்காயளவு) உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பூரணம் ரெடி.
வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும்.
இறைச்சியை கழுவி தனியே வைக்கவும்.
பாத்திரத்தில் சிறிது எண்ணெயை விட்டு காய்ந்தவுடன், பட்டை, நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
கழுவிய இறைச்சி, உப்பு, மிளகாய் தூள், தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக வதக்கவும்.
கடலைப்பருப்பை அதனுடன் சேர்த்து தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
கறி வெந்ததும், இறக்கி தண்ணீர் இருந்தால் வடித்து விட்டு, மிக்ஸியில் போட்டு வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைக்கவும்.
அரைத்த கறியை ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி, அதனுள் ஏற்கனவே செய்து வைத்திருக்கும் பூரண உருண்டையை வைத்து மூடவும்.
முட்டையை உடைத்து, நன்கு அடித்து அதனுடன் மைதா, சிறிது உப்பு சேர்த்து கலக்கவும்.
எண்ணெயை காயவைத்து, செய்து வைத்திருக்கும் கபாப்களை முட்டையில் முக்கி, பிரட் கிரம்ஸில் நன்கு புரட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum