Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


7 வயது சிறுமியை கடத்திய மர்ம நபர்: Whats App மூலம் மடக்கி பிடித்த பொலிஸ்

Go down

7 வயது சிறுமியை கடத்திய மர்ம நபர்: Whats App மூலம் மடக்கி பிடித்த பொலிஸ் Empty 7 வயது சிறுமியை கடத்திய மர்ம நபர்: Whats App மூலம் மடக்கி பிடித்த பொலிஸ்

Post by oviya Mon Jun 01, 2015 3:15 pm

மும்பையில் மர்ம நபரால் கடத்தப்பட்ட 7 வயது சிறுமியை சமூக வலைதளம் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பத்திரமாக மீட்டுள்ளனர்.
மும்பை காட்கோபர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ரியா, கடந்த 28ம் திகதி மர்ம ஆசாமி ஒருவரால் கடத்தப்பட்டாள்.

சிறுமியின் பெற்றோர் இதுபற்றி கொடுத்த புகாரின்பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

சிறுமி கடத்தப்பட்ட இடத்தில் இருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சிகளை பொலிசார் ஆய்வு செய்ததில் சிறுமி ரியாவை வாலிபர் ஒருவர் தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்துள்ளது.

பொலிசார் நடத்திய விசாரணையில், அங்கு தச்சு வேலை செய்து வந்த ராம்பிலால் பிரஜாபதி (24) தான் சிறுமியை கடத்தியது என்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிசார் ராம்பிலால் பிரஜாபதியை பிடிப்பதற்காக கண்காணிப்பு கமெராவில் பதிவாகி இருந்த அவரது படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்தநிலையில், ஜூபேர் தம்போலி என்ற போக்குவரத்து பொலிசார் நேற்று தானே ரயில் நிலையம் அருகில் பணியில் இருந்தபோது, ராம்பிலால் பிரஜாபதி அங்கு சிறுமியுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.

தனக்கு வாட்ஸ்அப்பில் வந்திருந்த படத்தை வைத்து அவர், அவர்களை அடையாளம் கண்டு கொண்டுள்ளார்.

இதையடுத்து அவர் ராம்பிலால் பிரஜாபதியை மடக்கி பிடித்து, சிறுமியை மீட்டு பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

மேலும், மீட்கப்பட்ட சிறுமி ரியாவை அவளது பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிசார் ராம்பிலால் பிரஜாபதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum