Top posting users this month
No user |
மியன்மார் முஸ்லிம்களுக்கெதிரான கொடுமைகளைக் கண்டித்து காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
மியன்மார் முஸ்லிம்களுக்கெதிரான கொடுமைகளைக் கண்டித்து காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்
மியன்மாரில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்து காத்தான்குடியில் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் இன்று இடம்பெற்றது.
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பேரணி காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இருந்து பிரதான வீதி வழியாக காத்தான்குடி பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.
அதனைத் தொடர்ந்து, மியன்மார் முஸ்லிம்கள் தொடர்பில் மூன்று கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உப தலைவர் மௌலவி எம்.சீ.எம்.ஸஹ்றான் (மஸ்ஊதி) காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மிலிடத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கையளித்தார்.
இப்பேரணியில், பெரும் திரளான மக்கள், இளைஞர்கள், சிறுவர், சிறுமிகள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் பர்மா பற்றி இலங்கை அரசு வாய் திறக்குமா? ஐநாவே பர்மா பற்றி உன் நிலைப்பாடு என்ன?, மியன்மார் பௌத்த அரசே முஸ்லிம்களின் மீது கை வைக்காதே! அவர்கள் எம் சகோதரர்கள், இலங்கை அரசே மியன்மார் தீவிரவாதி அசின் விராதுவை எம் நாட்டுக்குள் அனுமதிக்காதே, போன்ற வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum