Top posting users this month
No user |
கல்வியினூடாக எமது பண்பாட்டு விழுமியங்களைப்பேணுவோம்: த.தே.கூ வடமராட்சிக்கிழக்கு அமைப்பாளர் சூரியகாந்
Page 1 of 1
கல்வியினூடாக எமது பண்பாட்டு விழுமியங்களைப்பேணுவோம்: த.தே.கூ வடமராட்சிக்கிழக்கு அமைப்பாளர் சூரியகாந்
எதிர்காலம் பற்றிய எண்ணங்களோடும் சிந்தனைகளோடும் சாதனைகள் பலவற்றின் சிகரங்களைத்தொட்டு நாளைய விடியலில் சிறந்த தலைவர்களாக விளங்கப்போகும் முன்பள்ளிச்சிறார்களின் விளையாட்டுப்போட்டியில் கலந்து கொள்வதில் நான் பெருமையடைகிறேன்.
வடமராட்சிக்கிழக்கு வத்திராயன் விக்கினேஸ்வரா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சிக்கிழக்கு அமைப்பாளர் சூரியகாந் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமராட்சிக்கிழக்கு மண் எமது தர்மப்போரில் வீரியம் மிக்க விதைகளை தந்த மண் அம்மண் சார்ந்தவர்கள் செய்த தியாகங்கள் இன்றும் எம்மன எண்ணங்களில் நீச்சலடித்தவண்ணம் உள்ளது.
அவர்களின் தியாகங்களை மனதில் சுமந்த வண்ணம் கல்வியில் முன்னேற்றமடைந்து எம்மினத்துக்கேயுரித்தான பண்பாட்டு, விழுமியங்களை பேணவேண்டும்.
இன்றும் நாங்கள் தொடர்ச்சியான அழிவுகளையே சந்தித்து வருகிறோம். தேசிய இனமான தமிழர்களின் கலாச்சாரங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன.
எனவே முன்பள்ளிச்சிறார்களின் பெற்றோர்களே நீங்கள் எம்மினம் சார்ந்த கடந்த கால வாழ்வியலை பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறி கல்வியினூடாக இவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விருந்தினர்கள், முன்பள்ளிச்சிறார்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வடமராட்சிக்கிழக்கு வத்திராயன் விக்கினேஸ்வரா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப்போட்டி நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சிக்கிழக்கு அமைப்பாளர் சூரியகாந் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடமராட்சிக்கிழக்கு மண் எமது தர்மப்போரில் வீரியம் மிக்க விதைகளை தந்த மண் அம்மண் சார்ந்தவர்கள் செய்த தியாகங்கள் இன்றும் எம்மன எண்ணங்களில் நீச்சலடித்தவண்ணம் உள்ளது.
அவர்களின் தியாகங்களை மனதில் சுமந்த வண்ணம் கல்வியில் முன்னேற்றமடைந்து எம்மினத்துக்கேயுரித்தான பண்பாட்டு, விழுமியங்களை பேணவேண்டும்.
இன்றும் நாங்கள் தொடர்ச்சியான அழிவுகளையே சந்தித்து வருகிறோம். தேசிய இனமான தமிழர்களின் கலாச்சாரங்கள் அழிந்துகொண்டிருக்கின்றன.
எனவே முன்பள்ளிச்சிறார்களின் பெற்றோர்களே நீங்கள் எம்மினம் சார்ந்த கடந்த கால வாழ்வியலை பிள்ளைகளுக்கு எடுத்துக்கூறி கல்வியினூடாக இவர்களை நல்ல தலைவர்களாக உருவாக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விருந்தினர்கள், முன்பள்ளிச்சிறார்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum