Top posting users this month
No user |
வித்தியாவுக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
Page 1 of 1
வித்தியாவுக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்
யாழ்.புங்குடுதீவு பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து யாழில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
இந்த ஆரப்பாட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாடசாலைகளில், மற்றும் யாழ்.நகரப்பகுதியில் மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர்ந்த மற்றய கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
பாடசாலைகளில் மாணவர்கள வீதிக்கு இறங்கி தொடர் ஆர்ப்பாட்டத்தை தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் குடாநாட்டின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.நகரில் நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குடாநாடே ஸ்தம்பித்து கிடக்கின்றது.
குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் வாதாட கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான இறுதி தண்டனையாக இருக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
குடாநாட்டில் சகல வங்கிகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய ஆர்ப்பாட்டங்கள் கடையடைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள், மக்கள் வீதியில் நிறைந்து நிற்க கண்டன போராட்டங்களால் நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த ஆரப்பாட்டம் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
பாடசாலைகளில், மற்றும் யாழ்.நகரப்பகுதியில் மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தவிர்ந்த மற்றய கடைகள் அனைத்தும் பூட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது.
பாடசாலைகளில் மாணவர்கள வீதிக்கு இறங்கி தொடர் ஆர்ப்பாட்டத்தை தற்போது முன்னெடுத்து வரும் நிலையில் குடாநாட்டின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு
புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.நகரில் நீதிக்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குடாநாடே ஸ்தம்பித்து கிடக்கின்றது.
குற்றவாளிகளுக்காக சட்டத்தரணிகள் வாதாட கூடாது எனவும், குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனை இந்த நாட்டில் குற்றங்கள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கான இறுதி தண்டனையாக இருக்க வேண்டும் எனக்கோரி இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
குடாநாட்டில் சகல வங்கிகள், வர்த்தக நிலையங்கள், நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு இன்றைய ஆர்ப்பாட்டங்கள் கடையடைப்புக்கள் முன்னெடுக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்கள், மக்கள் வீதியில் நிறைந்து நிற்க கண்டன போராட்டங்களால் நீதிக்கான குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum