Top posting users this month
No user |
Similar topics
பொங்கல் கறி
Page 1 of 1
பொங்கல் கறி
சேப்பங்கிழங்கு - 50 கிராம்
அவரைக்காய் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
காரட் - 50 கிராம்
கொத்தவரங்காய் - 50 கிராம்
வாழைக்காய் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
கருணைக்கிழங்கு - ஒன்று
பூசணிக்காய் - ஒரு கீற்று
சிறிய செளசெள - பாதி
சர்க்கரைவள்ளி கிழங்கு - 50 கிராம்
பட்டாணி - 50 கிராம்
கொண்டைக்கடலை - 50 கிராம்
மொச்சை - 50 கிராம்
நிலக்கடலை - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 6
கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - குண்டு மணி அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
தக்காளி - 2
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி தழை - 2 கொத்து
பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். மற்ற காய்களை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கொண்டைக்கடலை, பட்டாணியை சில மணி நேரங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணி என்றால் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. புளியை முக்கால் கப் தண்ணீரில் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்களை போட்டு அதனுடன் துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, நிலக்கடலை, பட்டாணி போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூடி வெய்ட் போட்டு வேக விடவும். 4 விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயம் போட்டு பொரிக்கவும். பின்னர் தனியா, மிளகாய் வற்றல், சீரகம், கடலைப்பருப்பு, வெள்ள உளுத்தம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
சிறிது நேரம் ஆறவிட்டு பிறகு அதை மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்து விட்டு, பொடியாக ஆனதும் அதனுடன் தேங்காய்த் துருவல், தண்ணீர் கால் கப் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
புளியில் கரைத்து எடுத்து, வேக வைத்து எடுத்த காய்கறியில் ஊற்றவும். அதன் பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு அடுப்பில் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு கிளறி விடவும். மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
ஒரு கரண்டியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி கிளறி விடவும்.
இப்போது சுவையான பொங்கல் கறி தயார்.
அவரைக்காய் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
காரட் - 50 கிராம்
கொத்தவரங்காய் - 50 கிராம்
வாழைக்காய் - ஒன்று
உருளைக்கிழங்கு - ஒன்று
கருணைக்கிழங்கு - ஒன்று
பூசணிக்காய் - ஒரு கீற்று
சிறிய செளசெள - பாதி
சர்க்கரைவள்ளி கிழங்கு - 50 கிராம்
பட்டாணி - 50 கிராம்
கொண்டைக்கடலை - 50 கிராம்
மொச்சை - 50 கிராம்
நிலக்கடலை - 50 கிராம்
துவரம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 6
கடலைப் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
தனியா - ஒரு மேசைக்கரண்டி
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு - 2 மேசைக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - குண்டு மணி அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
தக்காளி - 2
தேங்காய் துருவல் - அரை கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
கொத்தமல்லி தழை - 2 கொத்து
பீன்ஸ், அவரைக்காய், கொத்தவரங்காய், தக்காளி ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கவும். மற்ற காய்களை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கொண்டைக்கடலை, பட்டாணியை சில மணி நேரங்கள் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பச்சைப் பட்டாணி என்றால் ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை. புளியை முக்கால் கப் தண்ணீரில் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்களை போட்டு அதனுடன் துவரம் பருப்பு, கொண்டைக்கடலை, நிலக்கடலை, பட்டாணி போட்டு 3 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூடி வெய்ட் போட்டு வேக விடவும். 4 விசில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி வைத்து விடவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் 2 தேக்கரண்டி ஊற்றி, காய்ந்ததும் பெருங்காயம் போட்டு பொரிக்கவும். பின்னர் தனியா, மிளகாய் வற்றல், சீரகம், கடலைப்பருப்பு, வெள்ள உளுத்தம் பருப்பு போட்டு 2 நிமிடம் வறுத்துக் கொள்ளவும்.
சிறிது நேரம் ஆறவிட்டு பிறகு அதை மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்து விட்டு, பொடியாக ஆனதும் அதனுடன் தேங்காய்த் துருவல், தண்ணீர் கால் கப் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
புளியில் கரைத்து எடுத்து, வேக வைத்து எடுத்த காய்கறியில் ஊற்றவும். அதன் பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு அடுப்பில் வைத்து ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை போட்டு கிளறி விடவும். மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
ஒரு கரண்டியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளித்து குழம்பில் ஊற்றி கிளறி விடவும்.
இப்போது சுவையான பொங்கல் கறி தயார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum