Top posting users this month
No user |
Similar topics
சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
Page 1 of 1
சந்திர தோஷம் போக்கும் திருப்பதி ஏழுமலையான்
சந்திர பகவான் வழிபட்ட தலங்களில் குறிப்பிடத்தக்க தலம் திருப்பதி. சந்திர தோஷம் உடையவர்கள் அவசியம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும். இத்திருத்தலம் கீழ்திருப்பதி, மேல் திருப்பதி என இரட்டை நகரமாக அமைந்துள்ளது.
கீழ் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலும், கபிலேச்சுவரர், சிவன் கோவில்கள் உள்ளன. நரசிம்மர் குகை ஒன்று உள்ளது. திருச்சானூரில் அலமேலு மங்கை ஆலயம் உள்ளது. மேல் திருப்பதியில் சீனிவாசப் பெருமாள் கோவிலும், புஷ்கரணி திருக்குளமும், குளக்கரையில் ஆதிவராகர் ஆலயமும் உள்ளன.
ராமானுஜர் சந்நிதியும் உள்ளது. சற்று மேலே ஆகாச கங்கைத் தீர்த்தமும், பாபவிநாசம் தீர்த்தமும் உள்ளன. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள் மார்பில் இருதேவியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்னர் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளித்து, ஸ்ரீவராக சுவாமியை வழிபட்டு, பிறகு ஏழு மலையானைத் தரிசிக்க செல்ல வேண்டும் கோவிலுக்குள் சென்றதும் ஓம் ஸ்ரீவேங்கடேசாய நமஹ என்பதை மட்டும் உங்களுக்குள் தியானியுங்கள்.
கோவிலுக்குள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யாதீர்கள். திருமலையில் பூக்கும் எல்லா மலர்களும் ஏழுமலையானுக்கே சொந்தமாகும். எனவே அவற்றைப் பறித்துச் சூடாதீர்கள். திருப்பதி செல்லும்போது திருச்சானூர் அலமேலு மங்கையையும் அவசியம் தரிசனம் செய்யுங்கள்.
கீழ் திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் கோவிலும், கபிலேச்சுவரர், சிவன் கோவில்கள் உள்ளன. நரசிம்மர் குகை ஒன்று உள்ளது. திருச்சானூரில் அலமேலு மங்கை ஆலயம் உள்ளது. மேல் திருப்பதியில் சீனிவாசப் பெருமாள் கோவிலும், புஷ்கரணி திருக்குளமும், குளக்கரையில் ஆதிவராகர் ஆலயமும் உள்ளன.
ராமானுஜர் சந்நிதியும் உள்ளது. சற்று மேலே ஆகாச கங்கைத் தீர்த்தமும், பாபவிநாசம் தீர்த்தமும் உள்ளன. இங்குள்ள ஸ்ரீனிவாச பெருமாள் மார்பில் இருதேவியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்னர் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளித்து, ஸ்ரீவராக சுவாமியை வழிபட்டு, பிறகு ஏழு மலையானைத் தரிசிக்க செல்ல வேண்டும் கோவிலுக்குள் சென்றதும் ஓம் ஸ்ரீவேங்கடேசாய நமஹ என்பதை மட்டும் உங்களுக்குள் தியானியுங்கள்.
கோவிலுக்குள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யாதீர்கள். திருமலையில் பூக்கும் எல்லா மலர்களும் ஏழுமலையானுக்கே சொந்தமாகும். எனவே அவற்றைப் பறித்துச் சூடாதீர்கள். திருப்பதி செல்லும்போது திருச்சானூர் அலமேலு மங்கையையும் அவசியம் தரிசனம் செய்யுங்கள்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
» தோஷம் போக்கும் வழிபாடுகளும் பரிகாரங்களும்
» நவக்கிரக தோஷம் போக்கும் வழிபாடு
» தோஷம் போக்கும் வழிபாடுகளும் பரிகாரங்களும்
» நவக்கிரக தோஷம் போக்கும் வழிபாடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum