Top posting users this month
No user |
Similar topics
7 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை: திருமணத்தை நிறுத்திய துபாய் பொறியாளர்
Page 1 of 1
7 மாதமாக சம்பளம் கிடைக்கவில்லை: திருமணத்தை நிறுத்திய துபாய் பொறியாளர்
துபாயில் பணியாற்றும் ஐதராபாத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர், சம்பளம் கிடைக்காததால் தனது திருமணத்தை நிறுத்திய சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் முகமது அப்துல் காதீர் (30) துபாயில் உள்ள நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
அவருக்கு மாதச் சம்பளம் 6500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 1,13,644) என்ற நிலையில் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக 3500 திர்ஹாம் சம்பளம் மட்டுமே வழங்கியுள்ளனர்.
இதையடுத்து கடந்த கடந்த 7 மாதமாக அந்த நிறுவனம் அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் காதீருக்கு ஐதராபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டு இந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.
திருமண ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்த நிலையில், காதீர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சம்பளம் குறித்து நிறுவனத்திடம் கேட்டபோது இரண்டு முறை கொஞ்சம் பணம் தந்தனர். அதன்பின் எதுவும் தரவில்லை. சம்பள பணத்திற்கு காத்திருக்கும்படி கூறினர்.
எனக்கு திருமணத்தை நிறுத்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை. எனது தங்கை திருமணத்திற்கு முன்பணமாக இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனத்திடம் இருந்து, 6 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளேன்.
என் நிலையை அறிந்த கடன் கொடுத்தவர்கள் எனது தங்கை திருமணத்தையும் நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காதீர் கடந்த மாதம் 20ம் திகதி, சம்பளம் கொடுக்காத நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த மின் பொறியாளர் முகமது அப்துல் காதீர் (30) துபாயில் உள்ள நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறார்.
அவருக்கு மாதச் சம்பளம் 6500 திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 1,13,644) என்ற நிலையில் அவருக்கு கடந்த அக்டோபர் மாதம் கடைசியாக 3500 திர்ஹாம் சம்பளம் மட்டுமே வழங்கியுள்ளனர்.
இதையடுத்து கடந்த கடந்த 7 மாதமாக அந்த நிறுவனம் அவருக்கு சம்பளம் கொடுக்கவில்லை.
இந்நிலையில் காதீருக்கு ஐதராபத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்டு இந்த மாதம் நடைபெறுவதாக இருந்தது.
திருமண ஏற்பாடுகளை அவரது குடும்பத்தினர் செய்து வந்த நிலையில், காதீர் தனது திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது சம்பளம் குறித்து நிறுவனத்திடம் கேட்டபோது இரண்டு முறை கொஞ்சம் பணம் தந்தனர். அதன்பின் எதுவும் தரவில்லை. சம்பள பணத்திற்கு காத்திருக்கும்படி கூறினர்.
எனக்கு திருமணத்தை நிறுத்துவதை தவிர வேறு வழி தெரியவில்லை. எனது தங்கை திருமணத்திற்கு முன்பணமாக இந்தியாவில் உள்ள சில தனியார் நிறுவனத்திடம் இருந்து, 6 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் வாங்கியுள்ளேன்.
என் நிலையை அறிந்த கடன் கொடுத்தவர்கள் எனது தங்கை திருமணத்தையும் நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காதீர் கடந்த மாதம் 20ம் திகதி, சம்பளம் கொடுக்காத நிறுவனத்திற்கு எதிராக தொழிலாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மணப்பெண்ணுக்கு 'காஸ்ட்லி' புடவை: கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை
» ஒருபாலின திருமணத்தை இலங்கை ஆதரிக்கின்றதா?: தேசிய சுதந்திர முன்னணி கேள்வி
» துபாய் பூசணிக்காய் கறி
» ஒருபாலின திருமணத்தை இலங்கை ஆதரிக்கின்றதா?: தேசிய சுதந்திர முன்னணி கேள்வி
» துபாய் பூசணிக்காய் கறி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum