Top posting users this month
No user |
Similar topics
துபாய் பூசணிக்காய் கறி
Page 1 of 1
துபாய் பூசணிக்காய் கறி
துபாய் பூசணிக்காய் (பெரியது) - ஒன்று
நறுக்கிய பச்சைமிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு)- அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - (2 - 3) மேசைக்கரண்டி
கறிவேப்பிலை(வெட்டியது) - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - அரைப்பாதி
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
மெட்ராஸ் கறித்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உள்ளி(பூண்டு வெட்டியது) - 2 பல்
இஞ்சி (விழுது) - சிறிதளவு
பால் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)
தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழச்சாறு) - சிறிதளவு
துபாய் பூசணிக்காயின் தேவையற்ற பகுதிகளை அகற்றி விட்டு அதனை இரு பலகையில் வைத்து ஓரளவு பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும்.
அதை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொரிய விடவும்.
வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய உள்ளி(பூண்டு),இஞ்சி விழுது ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு அதனுடன் வெட்டி கழுவிய துபாய் பூசணிக்காய் துண்டுகளை அதில் போட்டு வதக்கவும்.
ஓரளவு வதக்கிய பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மெட்ராஸ் கறித்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து அவியவிடவும்.
பூசணிக்காய் ஓரளவு அவிந்ததும் அதனுடன் பால், கறிவேப்பிலை, உப்பு, அஜினோமோட்டோ ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் அவியவிடவும்.
பின்பு அதனுடன் தேசிக்காய்சாறு(எலுமிச்சம்பழச்சாறு) விட்டு நன்றாக கலந்து சிறிது நேரத்தின் பின்பு சுவையான துபாய் பூசணிக்காய் கறி தயாராகி விடும்.
பின்பு துபாய் பூசணிக்காய் கறி உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சோறு(சாதம்)பாண், இடியப்பம், பிட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் இக்கறியை வைத்து பரிமாறவும்.
நறுக்கிய பச்சைமிளகாய் - ஒன்று
உப்பு - தேவையான அளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு)- அரைத்தேக்கரண்டி
எண்ணெய் - (2 - 3) மேசைக்கரண்டி
கறிவேப்பிலை(வெட்டியது) - சிறிதளவு
நறுக்கிய வெங்காயம் - அரைப்பாதி
மிளகாய்த்தூள் - ஒரு மேசைக்கரண்டி
மெட்ராஸ் கறித்தூள் - சிறிதளவு
மஞ்சள்தூள் - சிறிதளவு
உள்ளி(பூண்டு வெட்டியது) - 2 பல்
இஞ்சி (விழுது) - சிறிதளவு
பால் - தேவையான அளவு
அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி (விரும்பினால்)
தேசிக்காய்சாறு (எலுமிச்சம்பழச்சாறு) - சிறிதளவு
துபாய் பூசணிக்காயின் தேவையற்ற பகுதிகளை அகற்றி விட்டு அதனை இரு பலகையில் வைத்து ஓரளவு பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும்.
அதை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் வைக்கவும். பின்பு அடுப்பில் தாட்சியை (வாணலியை)வைத்து சூடாக்கிய பின்பு அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
எண்ணெய் சூடானதும் அதில் கடுகைப் போட்டு வெடிக்க விடவும். கடுகு வெடித்ததும் அதில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொரிய விடவும்.
வெங்காயம் ஓரளவு பொரிந்ததும் அதில் பெருஞ்சீரகம்(சோம்பு), நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய உள்ளி(பூண்டு),இஞ்சி விழுது ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
தாளித்த பின்பு அதனுடன் வெட்டி கழுவிய துபாய் பூசணிக்காய் துண்டுகளை அதில் போட்டு வதக்கவும்.
ஓரளவு வதக்கிய பின்பு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மெட்ராஸ் கறித்தூள் ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து அவியவிடவும்.
பூசணிக்காய் ஓரளவு அவிந்ததும் அதனுடன் பால், கறிவேப்பிலை, உப்பு, அஜினோமோட்டோ ஆகியவற்றை கலந்து சிறிது நேரம் அவியவிடவும்.
பின்பு அதனுடன் தேசிக்காய்சாறு(எலுமிச்சம்பழச்சாறு) விட்டு நன்றாக கலந்து சிறிது நேரத்தின் பின்பு சுவையான துபாய் பூசணிக்காய் கறி தயாராகி விடும்.
பின்பு துபாய் பூசணிக்காய் கறி உள்ள பாத்திரத்தை அடுப்பிலிருந்து இறக்கி கறியை ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
பின்பு ஒரு தட்டில் சோறு(சாதம்)பாண், இடியப்பம், பிட்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் இக்கறியை வைத்து பரிமாறவும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum