Top posting users this month
No user |
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் உயிரிழப்பு - குளவி தாக்கியதில் 11 பேர் பாதிப்பு
Page 1 of 1
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞன் உயிரிழப்பு - குளவி தாக்கியதில் 11 பேர் பாதிப்பு
காலி மாவட்டம், நெலுவ வதுகல பிரதேசத்தில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வெசாக் விடுமுறையையொட்டி களனி நாதுடுவ என்ற இடத்தைச் சேர்ந்த 13 பேர் நேற்று காலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு சிங்கராஜா வனாந்தரத்தில் அமைந்துள்ள வதுகல பிரதேசத்திலுள்ள ஆற்றில் நீராட சென்றுள்ளனர். இதன்போது அவர்களில் இருவர் ஆற்றில் அடித்துச் சென்றுள்ளனர். அதில் ஒருவர் அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.
அடித்துச் செல்லப்பட்டவர், களனி, நாதுடுவ என்ற இடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் காலி கடற்படையின் சுழியோடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தின் போது மேற்படி இளைஞன் மதுபோதையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குளவி தாக்கியதில் 11 பேர் பாதிப்பு
ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் எரோல் தோட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் தேயிலை செடிக்கு உரம் போட்டுக் கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை செடிக்கு உரம் போட்டுக்கொண்டிரும் போது தேயிலை அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட
தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான 11 பேரில் 2 பேர் குறித்த தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 9 பேர் டிக்கோயா கிளங்கன்
வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெசாக் விடுமுறையையொட்டி களனி நாதுடுவ என்ற இடத்தைச் சேர்ந்த 13 பேர் நேற்று காலிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்கு சிங்கராஜா வனாந்தரத்தில் அமைந்துள்ள வதுகல பிரதேசத்திலுள்ள ஆற்றில் நீராட சென்றுள்ளனர். இதன்போது அவர்களில் இருவர் ஆற்றில் அடித்துச் சென்றுள்ளனர். அதில் ஒருவர் அதிஷ்டவசமாக தப்பியுள்ளார்.
அடித்துச் செல்லப்பட்டவர், களனி, நாதுடுவ என்ற இடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் குறித்த இளைஞனின் சடலத்தை தேடும் பணியில் காலி கடற்படையின் சுழியோடிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவத்தின் போது மேற்படி இளைஞன் மதுபோதையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
குளவி தாக்கியதில் 11 பேர் பாதிப்பு
ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹற்றன் எரோல் தோட்டத்தில் இன்று காலை 10 மணியளவில் தேயிலை செடிக்கு உரம் போட்டுக் கொண்டிருந்த ஆண் தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.
தேயிலை செடிக்கு உரம் போட்டுக்கொண்டிரும் போது தேயிலை அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு இவ்வாறு தங்களை தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட
தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான 11 பேரில் 2 பேர் குறித்த தோட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஏனைய 9 பேர் டிக்கோயா கிளங்கன்
வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum