Top posting users this month
No user |
Similar topics
அனுமன் ஜெயந்தி விரத பலன்கள்…
Page 1 of 1
அனுமன் ஜெயந்தி விரத பலன்கள்…
வாழ்க்கையில் எந்தத் துன்பம் வந்தாலும் நினைத்த மாத்திரத்திலேயே வாயுவேகமாக வந்து நமக்கு உறுதுணையாக 80ec3b84-ef2d-4dba-8b70-6bac95b74888_S_secvpfநிற்பவர் வாயுபுத்ரன் அனுமன்தான். ராமாயணத்தில் இவருடைய பராக்கிரமங்களை விளக்க மட்டுமே ‘சுந்தர காண்டம்’ என்று ஒரு தனிப்பகுதி உண்டு.
சூரியனுடைய சக்தியையும், சந்திரனுடைய குணத்தையும், வருணனின் கருணையையும், வாயு பகவானின் வேகத்தையும், பூமியின் பொறுமையையும் ஒருங்கே பெற்றவர் ஆஞ்சநேயர். அவதாரங்கள் என்று சொல்லும் போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தசாவதாரம். சிவபெருமானும், விஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பல அவதார வடிவங்களை எடுத்து இருக்கிறார்கள்.
அதன்படி தூய்மையான பக்தி, ஞானம், வீரம், விவேகம், போன்றவற்றை எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயர் என்பது சாஸ்திரங்கள் மூலம் தெரிய வருகிறது. மார்கழி மாதம் மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னம், அமாவாசை திதியில் அனுமன் அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
அன்றைய தினம் அவர் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எல்லா விஷ்ணு தலங்களிலும் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சந்நதி இருக்கும். இது தவிர ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனிக்கோயில்களும் உள்ளன.
தமிழகத்தில் எங்கு நோக்கினும் விநாயகர் கோயில் இருப்பதைப் போல வடஇந்தியாவில் அனுமனுக்கு அதிக ஆலயங்கள் உள்ளன. அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர். தடைகளை உடைக்கும் வடை மாலை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது விசேஷமானதாகும்.
கிரக தோஷத்தை நீக்குவதற்காக வடை மாலை சாற்றுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் வழிபாடாகும். இன்றைய தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமிருந்து மாலையில் அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணெய், வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் மதியம் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விரதமிருக்கலாம் அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். இவ்வாறு விரதமிருந்து அனுமனை தரிசித்தால் வேண்டியவை அனைத்தும் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
சூரியனுடைய சக்தியையும், சந்திரனுடைய குணத்தையும், வருணனின் கருணையையும், வாயு பகவானின் வேகத்தையும், பூமியின் பொறுமையையும் ஒருங்கே பெற்றவர் ஆஞ்சநேயர். அவதாரங்கள் என்று சொல்லும் போது நமக்கு முதலில் நினைவுக்கு வருவது தசாவதாரம். சிவபெருமானும், விஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பல அவதார வடிவங்களை எடுத்து இருக்கிறார்கள்.
அதன்படி தூய்மையான பக்தி, ஞானம், வீரம், விவேகம், போன்றவற்றை எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயர் என்பது சாஸ்திரங்கள் மூலம் தெரிய வருகிறது. மார்கழி மாதம் மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னம், அமாவாசை திதியில் அனுமன் அவதாரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
அன்றைய தினம் அவர் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது. எல்லா விஷ்ணு தலங்களிலும் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சந்நதி இருக்கும். இது தவிர ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனிக்கோயில்களும் உள்ளன.
தமிழகத்தில் எங்கு நோக்கினும் விநாயகர் கோயில் இருப்பதைப் போல வடஇந்தியாவில் அனுமனுக்கு அதிக ஆலயங்கள் உள்ளன. அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர். தடைகளை உடைக்கும் வடை மாலை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது விசேஷமானதாகும்.
கிரக தோஷத்தை நீக்குவதற்காக வடை மாலை சாற்றுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் வழிபாடாகும். இன்றைய தினம் முழுவதும் உணவு உண்ணாமல் விரதமிருந்து மாலையில் அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணெய், வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் மதியம் ஒரு வேளை மட்டும் உணவருந்தி விரதமிருக்கலாம் அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். இவ்வாறு விரதமிருந்து அனுமனை தரிசித்தால் வேண்டியவை அனைத்தும் நிறைவேறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» 20 வகை பிரதோஷ விரத வழிபாட்டு பலன்கள்…
» கரூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது
» நங்கநல்லூர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 21-ந்தேதி தொடங்குகிறது
» கரூர் அருகே அனுமன் ஜெயந்தி விழா நாளை நடக்கிறது
» நங்கநல்லூர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 21-ந்தேதி தொடங்குகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum