Top posting users this month
No user |
பழிக்கு பழிவாங்க ரவுடி தலையை துண்டித்து சாலையில் ஊர்வலம்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
Page 1 of 1
பழிக்கு பழிவாங்க ரவுடி தலையை துண்டித்து சாலையில் ஊர்வலம்: அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பத்தர் செல்வம் (33) என்பவர் இன்று காலை நகராட்சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இன்னொரு ரவுடியான அறிவழகன் பழி வாங்கும் நோக்கில் இன்று அதிகாலை தனது கூட்டாளிகளுடன் ரவுடி பத்தர் செல்வன், அவர்களது கூட்டாளிகள் பிரகாஷ், ரவி ஆகியோரை தேடிச் சென்றுள்ளார்.
நகராட்சி பூங்காவிற்கு சென்ற அறிவழகன் பத்தர்செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அந்த இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகியுள்ளார்.
பின்னர், அவரது தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு, தலையை இடது கையிலும், வீச்சு அறிவாளை வலது கையிலும் வைத்துக்கொண்டு விழுப்புரம்–புதுவை சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அறிவழகன் கையில் தலையை வைத்துக்கொண்டு வருவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்.
இதையடுத்து அருகில் இருந்த காந்திசிலை முன்பு தலையை வைத்துவிட்டு, டவுன் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.
அறிவழகன் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், என் அண்ணனை கொன்றதில் மூளையாக செயல்பட்ட பத்தர்செல்வனை பழி வாங்குவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தேன்.
இனியும் பத்தர்செல்வனை விட்டு வைக்கக்கூடாது என்று கருதிய நான் இன்று கொலை திட்டத்தை அரங்கேற்றினேன் என்று கூறியுள்ளார்.
இந்த கொலையில், அறிவழகனுடன் மேலும் பலரும் சம்பந்தப்பட்டு உள்ள நிலையில் அவர்கள் யார் என்ற விவரம் தெரியாததால் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பத்தர் செல்வம் (33) என்பவர் இன்று காலை நகராட்சி பூங்கா விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இன்னொரு ரவுடியான அறிவழகன் பழி வாங்கும் நோக்கில் இன்று அதிகாலை தனது கூட்டாளிகளுடன் ரவுடி பத்தர் செல்வன், அவர்களது கூட்டாளிகள் பிரகாஷ், ரவி ஆகியோரை தேடிச் சென்றுள்ளார்.
நகராட்சி பூங்காவிற்கு சென்ற அறிவழகன் பத்தர்செல்வனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் அந்த இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாகியுள்ளார்.
பின்னர், அவரது தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு, தலையை இடது கையிலும், வீச்சு அறிவாளை வலது கையிலும் வைத்துக்கொண்டு விழுப்புரம்–புதுவை சாலையில் நடந்து சென்றுள்ளார்.
அறிவழகன் கையில் தலையை வைத்துக்கொண்டு வருவதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர்.
இதையடுத்து அருகில் இருந்த காந்திசிலை முன்பு தலையை வைத்துவிட்டு, டவுன் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்துள்ளார்.
அறிவழகன் பொலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், என் அண்ணனை கொன்றதில் மூளையாக செயல்பட்ட பத்தர்செல்வனை பழி வாங்குவதற்காக சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து இருந்தேன்.
இனியும் பத்தர்செல்வனை விட்டு வைக்கக்கூடாது என்று கருதிய நான் இன்று கொலை திட்டத்தை அரங்கேற்றினேன் என்று கூறியுள்ளார்.
இந்த கொலையில், அறிவழகனுடன் மேலும் பலரும் சம்பந்தப்பட்டு உள்ள நிலையில் அவர்கள் யார் என்ற விவரம் தெரியாததால் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum