Top posting users this month
No user |
Similar topics
சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
Page 1 of 1
சங்கடங்கள் தீர விநாயகர் வழிபாடு
விநாயகர் வழிபாடு எளிமையானது. காணாபத்தியம் என்று அழைக்கப்படுகிறது. விநாயகர் வழிபாட்டில், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு முக்கியமானது. பவுர்ணமிக்கு பிறகு 4வது நாளே (தேய்பிறை சதுர்த்தி) சங்கடஹர சதுர்த்தி. வளர்பிறை சதுர்த்தியில் நிலவைப் பார்த்தால் கேடு. அதேசமயம் தேய்பிறை சதுர்த்தியைப் பார்ப்பதோ சிறப்பு என்கின்றன புராணங்கள். விநாயகர் உலகை வலம் வந்தபோது, தனது அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, ‘நீ தேய்ந்து மறையக் கடவது’ என்று சபித்தார்.
பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி. ஆகவே, சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று. சங்கடம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஹர என்றால் நீக்குதல். சங்கடத்தை நீக்கும் நன்னாளே சங்கடஹர சதுர்த்தி. நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடைக்கப்பெற்றார். இதையடுத்து, தேய்பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார். விநாயகர் அவருடைய அபவாதம் நீக்கி, அனுக்கிரகம் செய்தார். செவ்வாய்(அங்காரகன்), சங்கடஹர கணபதியை வணங்கியதில் மங்களங்கள் பெற்று மங்கல் என்று பெயர் பெற்றார். சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் உள்ளது. சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் வரும். விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மகா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
ஆண்டின் அனை த்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்தாலே கிடைக்கும் என்பது ஐதீகம். தண்டகா வனத்தில் வசித்து வந்த விப்ரதன் என்ற வேடன், கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாத தீய குணங்கள் கொண்டவனாக இருந்தான். நல்வழிப்படுத்த எண்ணிய முனிவர் முத்கலர், அவனுக்குச் சங்கடஹர சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். முனிவர் கூறிய வழிமுறைகளின் படி, விநாயகரை இடைவிடாது வணங்கியதால் அவனின் நெற்றி நடுவில் இருந்து துதிக்கை தோன்ற ஆரம்பித்து, விநாயகரைப் போன்ற வடிவம் அடைந்தார். நாம் எதை எண்ணுகிறோமோ அதை நிறைவேற்றுபவர் விநாயகர்.
பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி. ஆகவே, சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று. சங்கடம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஹர என்றால் நீக்குதல். சங்கடத்தை நீக்கும் நன்னாளே சங்கடஹர சதுர்த்தி. நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.
கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடைக்கப்பெற்றார். இதையடுத்து, தேய்பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார். விநாயகர் அவருடைய அபவாதம் நீக்கி, அனுக்கிரகம் செய்தார். செவ்வாய்(அங்காரகன்), சங்கடஹர கணபதியை வணங்கியதில் மங்களங்கள் பெற்று மங்கல் என்று பெயர் பெற்றார். சங்கடஹர சதுர்த்திக்கு அங்காரகச் சதுர்த்தி என்றும் பெயர் உள்ளது. சங்கட ஹர சதுர்த்தி ஒவ்வொரு மாதமும் வரும். விநாயகர் சதுர்த்திக்கு (ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி) முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்திக்கு மகா சங்கட ஹர சதுர்த்தி என்று பெயர்.
ஆண்டின் அனை த்து சங்கடஹர சதுர்த்தி வழிபாடுகளையும் செய்த பலன் ஒரு மகா சங்கடஹர சதுர்த்தியில் வழிபாடு செய்தாலே கிடைக்கும் என்பது ஐதீகம். தண்டகா வனத்தில் வசித்து வந்த விப்ரதன் என்ற வேடன், கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாத தீய குணங்கள் கொண்டவனாக இருந்தான். நல்வழிப்படுத்த எண்ணிய முனிவர் முத்கலர், அவனுக்குச் சங்கடஹர சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். முனிவர் கூறிய வழிமுறைகளின் படி, விநாயகரை இடைவிடாது வணங்கியதால் அவனின் நெற்றி நடுவில் இருந்து துதிக்கை தோன்ற ஆரம்பித்து, விநாயகரைப் போன்ற வடிவம் அடைந்தார். நாம் எதை எண்ணுகிறோமோ அதை நிறைவேற்றுபவர் விநாயகர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விநாயகர் சதுர்த்தி வழிபாடு
» தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
» சங்கடங்கள் அகற்றும் சனி பகவான் அர்ச்சனை
» தோஷம் போக்கும் விநாயகர் வழிபாடு
» சங்கடங்கள் அகற்றும் சனி பகவான் அர்ச்சனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum