Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வசிஷ்டர் உருவாக்கிய வைத்தியநாத சுவாமி வழிபாடு

Go down

வசிஷ்டர் உருவாக்கிய வைத்தியநாத சுவாமி வழிபாடு Empty வசிஷ்டர் உருவாக்கிய வைத்தியநாத சுவாமி வழிபாடு

Post by oviya Thu Apr 16, 2015 3:32 pm

சிதம்பரத்தில் தரிசித்த பெருமையும், திருவாரூரில் பிறந்த பலனும், கங்கை, காசியில் இறந்த புண்ணியமும், திட்டக்குடியில் வந்து வசிஷ்டம் என்று வணங்கினாலேயே கிடைக்கும் என்கிறது திட்டக்குடி புராணம். பிரம்மதேவரின் புதல்வரும், சப்தரிஷிகளில் ஒருவரும், அருந்ததியை மணந்தவரும், தசரதனுக்கு குருவாக இருந்து ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் செய்தவரும், எட்டாவது துவாரக யுகத்தில் வேதவியாசராக இருந்தவரும், ஞான வசிஷ்டம் என்னும் வேதாந்த நூல், மனையடி சாஸ்திரம், சோதிட சித்தாந்தம் ஆகியவற்றை இயற்றியவரும், திட்டக்குடியில் ராமருக்கு மந்திர உபாசனம் செய்தவரும், அகத்தியரின் தம்பியாகி விளங்கியவருமான வசிஷ்டர் உருவாக்கிய திருத்தலம்தான் திட்டக்குடி வைத்தியநாத சுவாமி திருத்தலம்.

திட்டக்குடி புராணம். பிரம்மதேவரின் புதல்வரும், சப்தரிஷிகளில் ஒருவரும், அருந்ததியை மணந்தவரும், தசரதனுக்கு குருவாக இருந்து ராமபிரானுக்கு பட்டாபிஷேகம் செய்தவரும், எட்டாவது துவாரக யுகத்தில் வேதவியாசராக இருந்தவரும், ஞான வசிஷ்டம் என்னும் வேதாந்த நு'ல், மனையடி சாஸ்திரம், சோதிட சித்தாந்தம் ஆகியவற்றை இயற்றியவரும், திட்டக்குடியில் ராமருக்கு மந்திர உபாசனம் செய்தவரும், அகத்தியரின் தம்பியாகி விளங்கியவருமான வசிஷ்டர் உருவாக்கிய திருத்தலம்தான் திட்டக்குடி வைத்தியநாத சுவாமி திருத்தலம்.

இக்கோயிலில் சித்திரை மாதத்தில் பத்ரகாளி உற்சவம், வை காசி பவுர்ணமியில் விஷ்ணுவுக்கு உற்சவம், தைப்பூசத்தில் முருகனுக்கு உற்சவம், ஆடிப்பூரத்தில் அசனாம்பிகை மகா உற்சவம், ஆவணி சுக்கில பட்சத்தில் விநாயகருக்கு உற்சவம், பங்குனி உத்திரம் என பெருவிழாக்கள் நடைபெறும் ஸ்தலம். திட்டக்குடியை சுற்றி 24 புண்ணிய தீர்த்தங்கள் இருந்தன. குசன் தீர்த்தத்தில் இந்திரன் முழ்கி தேவேந்திர பதவியை பெற்றான். ராமதீர்த்தில் நீராடியதால் அக்னியின் பாவவினை பாவம் குறைந்தது. குபேரன் சக்தி, வசிஷ்டம் என இரு தீர்த்தங்களில் நீராடி குபேர பதவியை பெற்றான்.

ஒரே நேரத்தில் 401 திருமணங்கள் நடந்த ஊர். சுப்ரமணிய தலம், விக்னேஸ்வர தலம், துர்க்கை மற்றும் காளி தலங்கள் ஒருங்கே சூழ்ந்து இருப்பதால் தனிச்சிறப்பு வாய்ந்தது. ஜீவான்மாவும், பரமாத்மாவும் ஒன்றுபடுகின்ற சைதன்ய திருத்தலம். வசிஷ்டரின் சாபத்தினால் காகம் இரவில் இங்கு தங்காது. வசிஷ்ட மகா ரிஷிக்கு அருந்ததியை தேவேந்திரன் கன்னிகாதானம் செய்து கொடுத்த திருத்தலம் திட்டக்குடி. கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறைவு ஆகியவற்றுக்கும் பரிகார ஸ்தலம். இந்த கோயில் வேங்கை வனத்தில் அமைக்கப்பட்டதால் கோயிலின் ஸ்தல விருட்சம் வேங்கை மரமாகும்.

கோயில் அமைப்பு நான்கு மதில் கள், முன்று கோபுரங்கள் உடையனதாக மனுநீதி சோழன் இந்த கோயிலை உருவாக்கினார். குருவசிஷ்டரிடம் மனுமன்னன் ஆசி பெற்ற குருவுக்கு காணிக்கையாக கோயில் கட்டப்பட்டது. அத்தகைய மனுவழிபட்ட லிங்கம் இக்கோயிலில் உள்ளது. வைத்தியநாத சுவாமி கோயிலின் முதல் கோபுரம் நிலைக்காலுக்கு அடுத்து வாசல் உள்ளது. அங்கு கொடிக்கம்பம் முகப்பு கோபுரம் உள்ளன. நடுநாட்டுக்கோயில்கள் திட்டக்குடி கோயிலுக்கு கிடைத்த சிறப்புகள் இவை. பஞ்சலட்சணம் உடைய வசிஷ்ட லிங்கம் மனு உருவாக்கிய மனுலிங்கம், நகர தோரணம் பெற்ற கணபதி, பன்னிரு முருகன், துர்க்கா தேவி, சனீஸ்வரர் உள்ளிட்ட திருமேனிகள் அற்புத சித்திகளாக காட்சியளிக்கின்றன.

மகேஸ்வரி, பிராங்கி, இந்திராணி, சாமுண்டி, வராகி, வைஷ்ணவி, கௌரி என்னும் சப்த கன்னிகள் வசிஷ்டரின் ஆணைப்படி வார்க்கப்பட்டவை. எமலிங்கம், நாகதேவ லிங்கம், வாயு லிங்கம், வர்ண லிங்கம், காமநாக லிங்கம், பைரவர் ஆகிய உள்ளன. நயிருதி லிங்கம், அண்ணாமலையார், தட்சணாமுர்த்தி, நான்முகம், சண்டீகேஸ்வரி, குபேர லிங்கம், முருகன், சட்டநாதர் உள்ளிட்டவர்களுக்கு தனித்தனி முகப்புகள் கொண்ட மண்டபங்கள் உள்ளன. பிரம்மன் சிலை இரு காந்தவர்களுடன் கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum