Top posting users this month
No user |
Similar topics
மாலையுடன் வலம் வந்தால் மங்கல வாழ்வு கிடைக்கும்!
Page 1 of 1
மாலையுடன் வலம் வந்தால் மங்கல வாழ்வு கிடைக்கும்!
திருமணத்தடையால் சிரமப்படுபவர்கள், சித்தி புத்தி விநாயகருக்கு மாலை அணிவித்து, தாங்களும் அணிந்து கொண்டு வலம் வந்தால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும். சென்னை பாடி (திருவலிதாயம்) திருவல்லீஸ்வரர் கோயில் விநாயகர் சந்நிதியில் இந்த வழிபாடு நடக்கிறது.
தல வரலாறு: கஜமுகன் என்னும் அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தன் மகனான விநாயகரை அனுப்பி, அசுரர்களை வதம் செய்யும்படி கூறினார். அசுரனை அழித்த விநாயகர், தோஷ நிவர்த்திக்காக சிவனை வழிபட்டார். அவருக்கு விமோசனம் கொடுத்தருளிய சிவன், பிரம்மாவின் மகள்களான கமலை, வல்லியை மணந்து கொள்ளும்படி கூறினார். விநாயகரும் அவ்வாறே திருமணம் செய்து கொண்டார். அவர்களே சித்தி, புத்தி எனப்பட்டனர். இவர்களது திருமணம் இத்தலத்தில் நிகழ்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் விநாயகர் இங்கு கமலை, வல்லியுடன் காட்சியளிக்கிறார். இவரை "மாப்பிள்ளை விநாயகர்' என்று அழைக்கிறார்கள்.
குரு தலம்: குரு பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதனால், அவரது மகனான பரத்வாஜர், ஒரு சந்தர்ப்பத்தில் கரிக்குருவியின் (வலியன்) பிள்ளையாக பிறந்தார். பறவையாக பிறந்ததால் வருந்திய அவர், பல தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி விமோசனம் கேட்டார். இத்தலம் வந்தவர், சிவனை பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்ததோடு, பறவைகளின் தலைவனாகும்படி அருள் செய்தார். வலியனுக்கு அருளியதால் சுவாமி, "வலியநாதர்' என்று பெயர் பெற்றார். இத்தலமும் "திருவலிதாயம்' என்று பெயர் பெற்றது. குரு தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
திருமணக்கோயில்: விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் நல்ல வரன் அமையும். ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.
மத்திய தலம்: திருவல்லீஸ்வரர் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இத்தலம் நடுநாயகமாக இருக்க, சுற்றிலும் மாலையிட்டது போல 11 தேவாரப்பாடல் திருத்தலங்கள் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு. பவுர்ணமியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். இத்தல அம்பிகை, தன்னை வணங்கும் பக்தர்களை தாய்மை உணர்வுடன் பாதுகாப்பதால் "தாயம்மை' என்று பெயர் பெற்றிருக்கிறாள். பிரகாரத்தில் சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் இருக்கிறார்.
இருப்பிடம்: கோயம்பேடு- அம்பத்தூர் வழியில் 2 கி.மீ.. பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்தே சென்று விடலாம்.
திறக்கும் நேரம்: காலை 6.30 - 12.00, மாலை 4.30 - 8.30.
தல வரலாறு: கஜமுகன் என்னும் அசுரன் தேவர்களை துன்புறுத்தி வந்தான். அவனிடமிருந்து தங்களைக் காக்கும்படி தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். சிவன் தன் மகனான விநாயகரை அனுப்பி, அசுரர்களை வதம் செய்யும்படி கூறினார். அசுரனை அழித்த விநாயகர், தோஷ நிவர்த்திக்காக சிவனை வழிபட்டார். அவருக்கு விமோசனம் கொடுத்தருளிய சிவன், பிரம்மாவின் மகள்களான கமலை, வல்லியை மணந்து கொள்ளும்படி கூறினார். விநாயகரும் அவ்வாறே திருமணம் செய்து கொண்டார். அவர்களே சித்தி, புத்தி எனப்பட்டனர். இவர்களது திருமணம் இத்தலத்தில் நிகழ்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் விநாயகர் இங்கு கமலை, வல்லியுடன் காட்சியளிக்கிறார். இவரை "மாப்பிள்ளை விநாயகர்' என்று அழைக்கிறார்கள்.
குரு தலம்: குரு பகவான், தான் செய்த ஒரு தவறால் தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதனால், அவரது மகனான பரத்வாஜர், ஒரு சந்தர்ப்பத்தில் கரிக்குருவியின் (வலியன்) பிள்ளையாக பிறந்தார். பறவையாக பிறந்ததால் வருந்திய அவர், பல தலங்களுக்கும் சென்று சிவனை வணங்கி விமோசனம் கேட்டார். இத்தலம் வந்தவர், சிவனை பூஜை செய்து வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்ததோடு, பறவைகளின் தலைவனாகும்படி அருள் செய்தார். வலியனுக்கு அருளியதால் சுவாமி, "வலியநாதர்' என்று பெயர் பெற்றார். இத்தலமும் "திருவலிதாயம்' என்று பெயர் பெற்றது. குரு தோஷம் உள்ளவர்கள் நிவர்த்திக்காக இங்கு வேண்டிக்கொள்ளலாம்.
திருமணக்கோயில்: விநாயகர் மணக்கோலத்தில் இருப்பதால், திருமணத்தடை உள்ளவர்கள் இவருக்கு மாலை அணிவித்து வணங்கி, அவர் அணிந்த மாலையை தாங்கள் அணிந்து கொண்டு கோயிலை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் நல்ல வரன் அமையும். ஜோதிட ரீதியாக, குருவின் பார்வை வரும்வேளையில் தான் திருமணம் நிச்சயமாகும். நல்ல வரன் அமைய வியாழக்கிழமைகளில் இங்குள்ள குருபகவானுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபடுகிறார்கள்.
மத்திய தலம்: திருவல்லீஸ்வரர் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இத்தலம் நடுநாயகமாக இருக்க, சுற்றிலும் மாலையிட்டது போல 11 தேவாரப்பாடல் திருத்தலங்கள் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு. பவுர்ணமியன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும். இத்தல அம்பிகை, தன்னை வணங்கும் பக்தர்களை தாய்மை உணர்வுடன் பாதுகாப்பதால் "தாயம்மை' என்று பெயர் பெற்றிருக்கிறாள். பிரகாரத்தில் சிவலிங்கத்தை வழிபட்ட நிலையில் ஆஞ்சநேயர் இருக்கிறார்.
இருப்பிடம்: கோயம்பேடு- அம்பத்தூர் வழியில் 2 கி.மீ.. பஸ் ஸ்டாப்பில் இருந்து நடந்தே சென்று விடலாம்.
திறக்கும் நேரம்: காலை 6.30 - 12.00, மாலை 4.30 - 8.30.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மங்கல வாழ்வளிக்கும் மாக் கோலங்கள்
» மங்கல தேவி
» அப்துல் காமிற்கு பாம்பன் பாலத்தில் சிலை! வாட்ஸ் அப்பில் வலம் வரும் புகைப்படம்
» மங்கல தேவி
» அப்துல் காமிற்கு பாம்பன் பாலத்தில் சிலை! வாட்ஸ் அப்பில் வலம் வரும் புகைப்படம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum