Top posting users this month
No user |
29,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 250 பயணிகள்
Page 1 of 1
29,000 அடி உயரத்தில் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 250 பயணிகள்
அமெரிக்காவில் இருந்து மும்பைக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியுஜெர்சி நகரில் உள்ள நியூஆர்க் லிபர்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, அமெரிக்க நேரப்படி மாலை 4:50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 250 பேருடன் மும்பைக்கு புறப்பட்டுள்ளது.
அந்த விமானம் இரண்டு மணி நேரம் வானில் பயணம் செய்த நிலையில், சுமார் 29,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு என்ஜினிலிருந்து அதிர்வு சத்தம் அதிகமாக கேட்டுள்ளது.
இதையடுத்து விமானி மீண்டும் விமானத்தை நியூஆர்க் விமான நிலையத்திற்கே திருப்பியுள்ளார்.
நியூஆர்க் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு குறித்து பொறியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
அப்போது, அதில் உள்ள பிளேட் ஒன்று உடைந்திருந்ததன் காரணமாகவே சத்தம் அதிகமாக கேட்டது தெரியவந்துள்ளது.
விமானத்தில் 60 டன் எடையுள்ள எரிபொருள் இருந்ததால் கவனமாக செயல்பட்ட விமானியின் சாதுர்யத்தால் அதிலிருந்த 250 பேரும் உயிர் பிழைத்துள்ளனர்.
ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த பயணிகள் அனைவரும் டெல்லி செல்லும் மற்றொரு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியுஜெர்சி நகரில் உள்ள நியூஆர்க் லிபர்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து, அமெரிக்க நேரப்படி மாலை 4:50 மணிக்கு ஏர் இந்தியா விமானம் 250 பேருடன் மும்பைக்கு புறப்பட்டுள்ளது.
அந்த விமானம் இரண்டு மணி நேரம் வானில் பயணம் செய்த நிலையில், சுமார் 29,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென ஒரு என்ஜினிலிருந்து அதிர்வு சத்தம் அதிகமாக கேட்டுள்ளது.
இதையடுத்து விமானி மீண்டும் விமானத்தை நியூஆர்க் விமான நிலையத்திற்கே திருப்பியுள்ளார்.
நியூஆர்க் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியவுடன் விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு குறித்து பொறியாளர்கள் ஆராய்ந்துள்ளனர்.
அப்போது, அதில் உள்ள பிளேட் ஒன்று உடைந்திருந்ததன் காரணமாகவே சத்தம் அதிகமாக கேட்டது தெரியவந்துள்ளது.
விமானத்தில் 60 டன் எடையுள்ள எரிபொருள் இருந்ததால் கவனமாக செயல்பட்ட விமானியின் சாதுர்யத்தால் அதிலிருந்த 250 பேரும் உயிர் பிழைத்துள்ளனர்.
ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த பயணிகள் அனைவரும் டெல்லி செல்லும் மற்றொரு விமானத்தில் அனுப்பிவைக்கப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum