Top posting users this month
No user |
மூன்று துறைகள் மூலம் மைத்திரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மகிந்த ராஜபக்ச
Page 1 of 1
மூன்று துறைகள் மூலம் மைத்திரி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மகிந்த ராஜபக்ச
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சவை சூழ ஆபத்தான விதத்தில் இரட்டை பலம் கட்டியெழுப்பப்பட்டு வருவதாக அரசியல் விஞ்ஞான பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக பொதுக் கூட்டங்களை நடத்தி, அவரை அடுத்த பிரதமராக பெயரிட வேண்டும் என்ற கருத்தை உருவாக்குவதன் மூலமாக இந்த இரட்டை பலம் கட்டியெழுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
இந்த நிலமையின் வளர்ச்சி குறித்து அவதானித்து எதிர்காலத்தில் மக்களுக்கு தெளிவுப்படுத்த பகிரங்கமாக தலையிட போவதாகவும் அந்த பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று துறைகளின் ஊடாக மகிந்த ராஜபக்ச அரச நிர்வாகத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறார். முதலாவது, மைத்திரிபால சிறிசேனவுக்கு சார்பானவர்கள் போல் காட்டிக்கொண்டு மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக ஒரு குழு இரகசியமான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இரண்டாவது பாதுகாப்பு மற்றும் நிர்வாக சேவையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள். மூன்றாவது சில பௌத்த பிக்குமாரும் ஏனைய மதங்களை சேர்ந்த மதகுருக்கள்.
இவர்கள் மதவாத மற்றும் இனவாத அரசியலை பரப்பி வருகின்றனர். இந்த மூன்று துறைகள் ஊடாகவே மகிந்த ராஜபக்ச , மைத்திரிபால அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி தன்வசம் தக்கவைக்க முயற்சிக்காமல், மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் மக்களின் ஆதரவுடன் அரசாங்கத்தின் அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது ஜனாதிபதி மைத்திரிபால தற்போது கையாண்டு வரும் அரசியல் செயற்பாடுகளால், ராஜபக்ச ஆதரவு சக்திகள் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் குறித்த பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக பொதுக் கூட்டங்களை நடத்தி, அவரை அடுத்த பிரதமராக பெயரிட வேண்டும் என்ற கருத்தை உருவாக்குவதன் மூலமாக இந்த இரட்டை பலம் கட்டியெழுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
இந்த நிலமையின் வளர்ச்சி குறித்து அவதானித்து எதிர்காலத்தில் மக்களுக்கு தெளிவுப்படுத்த பகிரங்கமாக தலையிட போவதாகவும் அந்த பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மூன்று துறைகளின் ஊடாக மகிந்த ராஜபக்ச அரச நிர்வாகத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறார். முதலாவது, மைத்திரிபால சிறிசேனவுக்கு சார்பானவர்கள் போல் காட்டிக்கொண்டு மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக ஒரு குழு இரகசியமான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இரண்டாவது பாதுகாப்பு மற்றும் நிர்வாக சேவையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள். மூன்றாவது சில பௌத்த பிக்குமாரும் ஏனைய மதங்களை சேர்ந்த மதகுருக்கள்.
இவர்கள் மதவாத மற்றும் இனவாத அரசியலை பரப்பி வருகின்றனர். இந்த மூன்று துறைகள் ஊடாகவே மகிந்த ராஜபக்ச , மைத்திரிபால அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுத்து வருகிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி தன்வசம் தக்கவைக்க முயற்சிக்காமல், மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் மூலம் கிடைக்கும் மக்களின் ஆதரவுடன் அரசாங்கத்தின் அதிகாரத்தை ஸ்திரப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காது ஜனாதிபதி மைத்திரிபால தற்போது கையாண்டு வரும் அரசியல் செயற்பாடுகளால், ராஜபக்ச ஆதரவு சக்திகள் சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் குறித்த பேராசிரியர் மேலும் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum