Top posting users this month
No user |
கடன் சுமை அதிகரிப்பாம்: மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு விட முடிவு
Page 1 of 1
கடன் சுமை அதிகரிப்பாம்: மத்தள விமான நிலையத்தை குத்தகைக்கு விட முடிவு
மத்தள விமான நிலையம் குத்தகைக்கு விடப்படவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கையிலுள்ள அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கே விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்தினால் மாதாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிறுவனத்தின் தொடர்பாடல் அதிகாரி டெரிக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பெற்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன என அவர் தெரிவித்துள்ளதுடன்,
விமான பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக மத்தள விமான நிலையத்தை குத்தகையில் எடுப்பதற்கு மேலும் 5 வெளிநாட்டு நிறுவனங்கள் எழுத்துமூல ஆவணங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு நிறுவனங்களை தவிர வட ஆசியாவின் முன்னணி நிறுவனமொன்று உலகம் முழுவதிலும் மின்னணு உபகரணங்கள் மற்றும் பொருட்களை விநியோகிக்கும் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது.
அத்துடன் குறித்த விமான நிலையத்தை கட்டுவதற்காக பெறப்பட்ட கடன்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துவதற்கு கால அவகாசம் பெறப்பட்டுள்ளதாகவும் டெரிக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் கடன்தொகையை செலுத்துவதற்கு ஏற்பட்டுள்ள சிரமம் காரணத்தினாலேயே இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி இலங்கையிலுள்ள அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கே விமான நிலையத்தை குத்தகைக்கு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்தினால் மாதாந்தம் 250 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக நிறுவனத்தின் தொடர்பாடல் அதிகாரி டெரிக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தை பெற்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன என அவர் தெரிவித்துள்ளதுடன்,
விமான பயிற்சி நிலையம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்காக மத்தள விமான நிலையத்தை குத்தகையில் எடுப்பதற்கு மேலும் 5 வெளிநாட்டு நிறுவனங்கள் எழுத்துமூல ஆவணங்கள் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு நிறுவனங்களை தவிர வட ஆசியாவின் முன்னணி நிறுவனமொன்று உலகம் முழுவதிலும் மின்னணு உபகரணங்கள் மற்றும் பொருட்களை விநியோகிக்கும் களஞ்சியசாலையாக மத்தள விமான நிலையத்தை பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டியுள்ளது.
அத்துடன் குறித்த விமான நிலையத்தை கட்டுவதற்காக பெறப்பட்ட கடன்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் செலுத்துவதற்கு கால அவகாசம் பெறப்பட்டுள்ளதாகவும் டெரிக் கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் கடன்தொகையை செலுத்துவதற்கு ஏற்பட்டுள்ள சிரமம் காரணத்தினாலேயே இந்த விமான நிலையத்தை குத்தகைக்கு விட தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum