Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


54 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர் வலியுறுத்து

Go down

54 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர் வலியுறுத்து Empty 54 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர் வலியுறுத்து

Post by oviya Mon Mar 23, 2015 12:51 pm

இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 54 மீனவர்களையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இலங்கை மீனவ பிரதிநிதிகள் இன்று சென்னைக்கு செல்லவுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் இக்கைது நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது என தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும் எனவும், இது தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் 10 படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு தீர்க்கமான மற்றும் நிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டு கொண்டுள்ளார்.

தமிழக மீனவர்களை விடுவித்தால் மாத்திரமே நாளை சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமையும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum