Top posting users this month
No user |
54 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர் வலியுறுத்து
Page 1 of 1
54 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்: தமிழக முதல்வர் வலியுறுத்து
இலங்கை கடற்படையினரால் அண்மையில் கைது செய்யப்பட்ட 54 மீனவர்களையும் விடுவிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இலங்கை மீனவ பிரதிநிதிகள் இன்று சென்னைக்கு செல்லவுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் இக்கைது நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது என தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும் எனவும், இது தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் 10 படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு தீர்க்கமான மற்றும் நிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழக மீனவர்களை விடுவித்தால் மாத்திரமே நாளை சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமையும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு நாளை சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக இலங்கை மீனவ பிரதிநிதிகள் இன்று சென்னைக்கு செல்லவுள்ள நிலையில், இலங்கை கடற்படையினரின் இக்கைது நடவடிக்கை அதிர்ச்சியளிக்கிறது என தமிழக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை கடற்படையினர் இந்த நடவடிக்கை குறித்த பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக அமையும் எனவும், இது தமிழக மீனவர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கடற்படையினரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட மீனவர்களையும் 10 படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு தீர்க்கமான மற்றும் நிலையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டு கொண்டுள்ளார்.
தமிழக மீனவர்களை விடுவித்தால் மாத்திரமே நாளை சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை அர்த்தமுள்ளதாக அமையும் என தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum