Top posting users this month
No user |
நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞன் காணாமல் போயுள்ளார்- முதியவர் ஒருவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
Page 1 of 1
நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளைஞன் காணாமல் போயுள்ளார்- முதியவர் ஒருவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்க சென்ற இளைஞர் ஒருவர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நோர்வூட் பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சேகர் அமரதேவன் எனும் இளைஞரே நீர்த்தேக்கத்தில் மூழ்கி காணாமல் போயிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ தினத்தன்று மாலை தனது நண்பர் ஒருவருடன் இணைந்து நீர்த்தேக்கத்தில் மீன் பிடிக்க சென்றுள்ளார். அங்கு இருவரும் பிரிந்து சென்று மீன் பிடிக்கின்றபோது குறித்த இளைஞன் காணாமல் போயிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல்போன குறித்த இளைஞனை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தேடி வருகின்றனர்.
காணாமல்போன முதியவர் 15 அடி பள்ளத்திலிருந்து மீட்பு
காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த முதியவர் ஒருவர் காட்டுப்பகுதியில் 15 அடி பள்ளத்தில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கினிகத்தேனை பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்த தொலவத்தகே தொண் உபசேன (வயது 82) என்ற முதியவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தார் கினிகத்தேனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றுக் காலை 11.30 மணியளவில் அவரது செருப்பு, குடை, சாரம் என்பன கினிகத்தேனை தியநில்ல பகுதியில் காணப்பட்டதையடுத்து, இது தொடர்பாக மஸ்கெலியா அதிரடிப் படை உயரதிகாரி சி.ஐ.குலந்துங்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து அதிரடிபடையினருடன் சென்று தேடுதல் மேற்கொண்ட போது 15 அடி பள்ளத்தில் காட்டுப்பகுதியில் முதியவர் விழுந்து கிடந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum