Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழர்களின் பெரும் கடமையாளன் அமரர்.இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்

Go down

தமிழர்களின் பெரும் கடமையாளன் அமரர்.இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள்: பா.உறுப்பினர் சி.சிறீதரன் Empty தமிழர்களின் பெரும் கடமையாளன் அமரர்.இராமலிங்கம் நாகலிங்கம் அவர்கள்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்

Post by oviya Sun Mar 22, 2015 1:09 pm

தமிழர் விடியலுக்காய் பாடுபட்ட இராமலிங்கம் நாகலிங்கம் அவர்களின் மறைவையொட்டி தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி அறிவகம் செயலகம் ஊடாக வணக்கத்தை தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் புலம்பெயர் வாழ்வில் மிக உயர்ந்த மனிதர்களாய் தங்கள் கடமையை தான் பிறந்த மண்ணுக்காக சேவை ஆற்றியவர்களில் அமரர்.இராமலிங்கம் நாகலிங்கமும் மிக உயர்ந்தவர்.

நீண்ட புலம் பெயர் வாழ்வு அவருடையது அதனால் இந்த மண் பற்றிய ஏக்கமும் தாகமும் அவருக்கு அதிகம்.

இந்த மண்ணுக்கு தான் ஆற்ற வேண்டிய கடமையை இந்த மண்ணின் வேர்களோடும் விழுதுகளோடும் சேர்ந்து ஆற்றினார்.

ஒரு இனத்தின் அடையாளத்தில் மிக முக்கியமானது மொழி என்பதை உணர்ந்திருந்த அவர் தமிழ் மொழியை புலம்பெயர் தேசத்தில் குறிப்பாக ஜேர்மனியில் ஒரு அமைப்பினுடாக இளைய சமுதாயத்திடம் வளர்தெடுப்பதற்கு எடுத்த முயற்சியில் வெற்றிகண்டார்.

இளைய சமுதாயத்திடமும் புலம்பெயர் தமிழ் மக்களிடமும் தமிழ்மொழி தாயகம் உரிமை சுதந்திரம் பற்றிய விழப்புணர்வின் வடிவமாக அமரர்.இ.நாகலிங்கம் அவர்கள் இருந்துள்ளார்.

அவரது சேவையை தமிழர்களின் தன்னிகரில்லா தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்கள் மதிப்பளித்துள்ளார். அதன் மூலம் அமரர்.நாகலிங்கம் அவர்களின் கடமையின் உயர்வு அறியப்பட்டுள்ளது.

ஒரு மாமனிதர் அமரர்.நாகலிங்கம் அவர்கள் இன்று பல விருட்சங்களுக்கு விதையூன்றியவர், உலக தமிழ்மக்களின் மனங்களில் என்றும் அழியாப்புகழ்பெற்ற அவரின் மறைவுக்கு தாயக மக்களின் சார்பில் எமது வணக்கத்தை பகிர்ந்து கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum