Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமர் ரணிலின் சர்வதேச ஆலோசகர் கோத்தபாயவா?

Go down

பிரதமர் ரணிலின் சர்வதேச ஆலோசகர் கோத்தபாயவா? Empty பிரதமர் ரணிலின் சர்வதேச ஆலோசகர் கோத்தபாயவா?

Post by oviya Wed Mar 11, 2015 1:31 pm

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சர்வதேச விவகாரங்கள் தொடர்பான ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகம் கொழும்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அண்மையில் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பிற்குள் வரும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுட்டுக்கொன்றால், குற்றவாளி என்ற பொறுப்பில் இருந்து கடற்படையினர் விடுவிக்கப்படுவார்கள் என கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்து இருநாடுகளிலும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே கோத்தபாய ராஜபக்ச, பிரதமரின் சர்வதேச ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரோ என்ற சந்தேகத்தை தோற்றுவித்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடற்படையினரின் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு விளக்கம் கூறியுள்ள பிரதமர், தனது வீட்டுக்குள் அத்துமீறி நுழையும் எவரையும் சுடும் உரிமை வீட்டு உரிமையாளருக்கு உண்டு எனக் கூறியிருந்தார்.

சட்டத்தரணியான பிரதமர் ரணில், குற்றம் செய்யும் நோக்கில் நுழைவது மற்றும் கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி பிரவேசிப்பது ஆகிய இரண்டு விடயங்களின் வித்தியாசங்கள் குறித்து அறியாது இருப்பது நகைப்புக்குரியது.

குற்றம் செய்யும் நோக்கில் நுழையும் நபரை நுழையவிடாமல் தடுப்பது தனிப்பட்ட பாதுகாப்பு கருதிய உரிமை.

இதனை மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு எப்படி பொருந்தும் என்பதை இரண்டு நாடுகளில் உள்ள படித்த சட்டத்தரணிகள் பிரதமர் ரணிலுக்கு விளக்கி கூறவேண்டும்.

இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை இன்று நேற்று தொடங்கியதல்ல. அது பல்லாண்டு கால வரலாற்றை கொண்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் மூடத்தனமான தூரநோக்க செயற்பாடுகளால் கடந்த காலத்தில் இந்த பிரச்சினை மேலும் அதிகரித்தது. எனினும் இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதியின்றி நுழையும் மீனவர்களை அவர் சுடவில்லை. கோத்தபாய, அவர்களை கைது செய்தார்.

தற்போதைய பிரதமர் இனவாதிகளை குஷிப்படுத்துவதற்காக இரண்டாம் வகுப்பு கதைகளை கூறுகிறார். அவர் போன்ற நபர் இப்படியான கதைகளை கூறுவது தகுதியானதல்ல.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, துறைமுக நகர அபிவிருத்தித் திட்டத்திலும் இது போன்ற தவறை செய்தார். ஆட்சிக்கு வந்ததும் துறைமுக நகர அபிவிருத்தித் திட்டம் நிறுத்தப்படும் என அவர் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் கூறியிருந்தார்.

ராஜபக்சவை விரட்ட முழு உதவியையும் செய்த இந்தியாவை மகிழ்விக்கவே அவர் அப்படி கூறினார். துறைமுக நகரம் தொடர்பான ஆய்வறிக்கையின் பின்னர் அவர் இதனை கூறவில்லை.

துறைமுக நகர திட்டம் தற்போது நல்லாட்சி அரசாங்கத்திற்கு பெரும் பாதக தன்மையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ரணில் ஒன்றையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஒன்றையும் கூறிவருகின்றனர். இவர்கள் விசர்த்தனமான வேலைகளை செய்து வருகின்றனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பன்பட்ட ராஜதந்திர என்ற வகையில் பிராந்திய அரசியல் நிலைமைகளை புரிந்து கொள்ள வேண்டும். தென்னிந்திய அரசியலில் மீனவ சமூகமே பெரும்பான்மை வாக்கு வங்கியை கொண்டிருக்கிறது.

மீனவ சமூகம் தொடர்பான பிரச்சினை இந்திய அரசியல் பெரும் அழுத்தங்களை ஏற்படுத்தி வருகிறது. தென்னிந்திய மீனவர்கள் இந்திய அரசியலில் அதிக மதிப்பீடுகளை கொண்டு பிரிவினர்.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில், இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்யும் தருவாயில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடன்படாத வார்த்தைகளை உதிர்த்துள்ளார்.

27 வருடங்களுக்கு பின்னர், இந்திய பிரதமர் ஒருவர் அடுத்த சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்திய பிரதமரின் விஜயம் பற்றிய பொறுப்பும் இல்லை எனவும் அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.



oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum