Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஊழல் வழக்கில் முதல்வருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம்

Go down

ஊழல் வழக்கில் முதல்வருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம் Empty ஊழல் வழக்கில் முதல்வருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை: உயர்நீதிமன்றம்

Post by oviya Thu Mar 05, 2015 1:39 pm

ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது கடந்த 2000-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 206 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

போலி ஆவணங்கள் தயாரித்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இது குறித்து சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் ஆசிரியர் தேர்வில் ஊழல்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக சவுதாலா, அவர் மகன் அஜய் சவுதாலா உள்பட 53 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிறகு அனைவர் மீதும் கடந்த 2008-ம் ஆண்டு சி.பி.ஐ. குற்றப்ப த்திரிக்கையை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் சவுதாலா உட்பட 53 பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது.

இதனைத் தொடர்ந்து சவுதாலா, மகன் அஜய் சவுதாலா உள்ளிட்டோர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து சவுதாலா உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர்.

இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இன்று சவுதாலா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையையும் உறுதி செய்தது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum