Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு

Go down

அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு Empty அவுஸ்திரேலியாவிற்கு ஆட்கடத்தல் நடவடிக்கைகளுடன் கடற்படையினருக்கு தொடர்பு

Post by oviya Wed Feb 25, 2015 1:09 pm

அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்கள் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசகர் ஒருவரின் உத்தரவுகளின் அடிப்படையில் கடற்படையினரின் அனுசரணையுடன் மேற்கொள்ளப்படுவதாக தெரியவந்துள்ளது.
இந்நாட்களில் இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையில் இடம் பெறுகின்ற இராஜதந்திர உறவுகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய சட்டவிரோத ஆட்கடத்தல் சம்பவங்களுக்கு (Human Smuggling) இலங்கை கடற்படையினர் தொடர்பு என பிரதமரின் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளதோடு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசகர் ஒருவரின் உத்தரவுகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.

சமீபத்தில் அவுஸ்திரேலிய ஊடகமொன்றுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய செவ்வியில் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் ஒத்துழைப்பு இன்றி இவ்வாறு சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடற்படையின் லெப்டினன் கேர்ணல் ஒருவரே இவ்வாறு ஆட்கடத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடத்தும் புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரியும் ஒரே பாடசாலையைச் சேர்ந்தவர்கள் என்பதனால் விசாரணை இடையில் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடபடுகிறது.

இந்த லெப்டினன் கேர்ணல் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

2012 மற்றும் 2013ம் ஆண்டு படகுகள் மூலம் யாழ்பாணம், மன்னார், சிலாபம், நீர்கொழும்பு, வத்தளை, காலி, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை பிரதேசங்களில் இருந்து 120 படகுகள் அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அனுப்பப்பட்டுள்ள படகுகளில் ஒரு படகிற்கு சுமார் 100 , 150ற்கு இடைப்பட்ட மக்கள் அனுப்பபட்டுள்ளனர் அதில் அதிகமானோர் தமிழ் மக்கள். இவ்வாறு அனுப்பப்பட்ட மக்களில் ஒருவரிடம் தலா 10 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

குறித்த படகுகளின் ஓட்டுனராக செயற்பட்டவர்கள் கடற்படையினரே எனவும் குறிப்பிடப்படுகின்றது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum