Top posting users this month
No user |
Similar topics
தீப்பிடித்து எரியும் குழந்தை: நிலவும் மர்மம்… பின்னணி என்ன?
Page 1 of 1
தீப்பிடித்து எரியும் குழந்தை: நிலவும் மர்மம்… பின்னணி என்ன?
விழுப்புரம் மாவட்டத்தில் குழந்தையின் உடலில் தானாக தீக்காயம் ஏற்படவில்லை என்பது உறுதியாகிவிட்டதால், உண்மையை கண்டுபிடிக்க பொலிசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கூலித் தொழிலாளி கருணா(26)- ராஜேஸ்வரி(24).
இவர்களது குழந்தைகள் நர்மதா(3), ராகுல்(2). பிறந்த இரண்டரை மாதங்களில் ராகுல் உடலில் தானாக தீக்காயம் ஏற்படுவதாகக் கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட போது, குழந்தைக்கு 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, காயங்கள் குணமானதும் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு கடந்த மாதம் 9-ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களிலேயே குழந்தையின் உள்ளங்கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
உடலில் தானாக தீப்பிடிக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முதல் குழந்தை ராகுல் போலவே, இந்த குழந்தைக்கும் ரத்தம், சிறுநீர், வியர்வை உட்பட 37 பரிசோதனைகள் செய்யப்பட்டன.
குழந்தையின் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.
இதுபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் நாராயணபாபு கூறியதாவது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியின் முதல் ஆண் குழந்தை ராகுலுக்கு 20 நாட்களுக்கு மேல் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தை உடலில் 3 முறை தானாக தீக்காயம் ஏற்பட்டதாக தந்தை கருணா கூறினார். ஆனால் இதை ராஜேஸ்வரி பார்க்கவில்லை. 2-வது குழந்தை 20 நாட்களாக சிகிச்சையில் இருக்கிறது.
இந்த குழந்தையின் உடலில் சுற்றியிருந்த துணி திடீரென தீப்பற்றி எரிந்ததால் குழந்தையின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டதாக ராஜேஸ்வரி சொல்கிறார்.
அப்போது வீட்டில் கருணா இல்லை. இங்கு மருத்துவமனையில் சிகிச்சையின் போது, 2 குழந்தைகளின் உடலிலும் தானாக தீப்பற்றவில்லை, தீக்காயமும் ஏற்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
குழந்தையின் உடலில் எப்படி தீக்காயம் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க, தீப்பற்றி எரிந்த துணியை தடயவியல் துறையிடம் கொடுக்கவுள்ளோம்.
மருத்துவமனையில் இருந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பொலிசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.
பிறகு, இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிசாரிடம் கூற உள்ளோம். அவர்களது பெண் குழந்தை நர்மதாவுக்கு இதுபோல எதுவும் நிகழவில்லை. 2 ஆண் குழந்தைகளுக்கு மட்டும்தான் இதுபோன்ற பிரச்சினையைக் கூறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயங்கள் சிகிச்சைத் துறை முன்னாள் தலைவர் மருத்துவர் ஜெகன்மோகன் கூறியபோது, குழந்தை ராகுல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதே பிரச்சினையுடன் இங்கு வந்தபோது நான் சிகிச்சை அளித்தேன். குழந்தையின் உடலில் தானாக தீக்காயம் எதுவும் ஏற்படவில்லை.
குழந்தையின் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்றே அப்போதும் பரிசோதனை முடிவுகள் வந்தன என்றும் பொலிசார், தடயவியல் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் எனவும் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அடுத்த நெடிமோழியனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கூலித் தொழிலாளி கருணா(26)- ராஜேஸ்வரி(24).
இவர்களது குழந்தைகள் நர்மதா(3), ராகுல்(2). பிறந்த இரண்டரை மாதங்களில் ராகுல் உடலில் தானாக தீக்காயம் ஏற்படுவதாகக் கூறி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட போது, குழந்தைக்கு 20 நாட்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, காயங்கள் குணமானதும் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் ராஜேஸ்வரிக்கு கடந்த மாதம் 9-ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. பிறந்த சில நாட்களிலேயே குழந்தையின் உள்ளங்கால்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து, பச்சிளம் குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
உடலில் தானாக தீப்பிடிக்க சாத்தியக்கூறு இருக்கிறதா என்று கண்டுபிடிக்க முதல் குழந்தை ராகுல் போலவே, இந்த குழந்தைக்கும் ரத்தம், சிறுநீர், வியர்வை உட்பட 37 பரிசோதனைகள் செய்யப்பட்டன.
குழந்தையின் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என பரிசோதனை முடிவுகளில் தெரியவந்தது.
இதுபற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் டீன் நாராயணபாபு கூறியதாவது, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியின் முதல் ஆண் குழந்தை ராகுலுக்கு 20 நாட்களுக்கு மேல் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
குழந்தை உடலில் 3 முறை தானாக தீக்காயம் ஏற்பட்டதாக தந்தை கருணா கூறினார். ஆனால் இதை ராஜேஸ்வரி பார்க்கவில்லை. 2-வது குழந்தை 20 நாட்களாக சிகிச்சையில் இருக்கிறது.
இந்த குழந்தையின் உடலில் சுற்றியிருந்த துணி திடீரென தீப்பற்றி எரிந்ததால் குழந்தையின் கால்களில் தீக்காயம் ஏற்பட்டதாக ராஜேஸ்வரி சொல்கிறார்.
அப்போது வீட்டில் கருணா இல்லை. இங்கு மருத்துவமனையில் சிகிச்சையின் போது, 2 குழந்தைகளின் உடலிலும் தானாக தீப்பற்றவில்லை, தீக்காயமும் ஏற்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
குழந்தையின் உடலில் எப்படி தீக்காயம் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்க, தீப்பற்றி எரிந்த துணியை தடயவியல் துறையிடம் கொடுக்கவுள்ளோம்.
மருத்துவமனையில் இருந்து குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் பொலிசார் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும்.
பிறகு, இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு பொலிசாரிடம் கூற உள்ளோம். அவர்களது பெண் குழந்தை நர்மதாவுக்கு இதுபோல எதுவும் நிகழவில்லை. 2 ஆண் குழந்தைகளுக்கு மட்டும்தான் இதுபோன்ற பிரச்சினையைக் கூறுகின்றனர் என்று கூறியுள்ளார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயங்கள் சிகிச்சைத் துறை முன்னாள் தலைவர் மருத்துவர் ஜெகன்மோகன் கூறியபோது, குழந்தை ராகுல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இதே பிரச்சினையுடன் இங்கு வந்தபோது நான் சிகிச்சை அளித்தேன். குழந்தையின் உடலில் தானாக தீக்காயம் எதுவும் ஏற்படவில்லை.
குழந்தையின் உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என்றே அப்போதும் பரிசோதனை முடிவுகள் வந்தன என்றும் பொலிசார், தடயவியல் அதிகாரிகள் விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும் எனவும் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரஜினிக்கு எதிராக தூண்டிவிடப்படும் ஜெயலலிதா: பின்னணி என்ன?
» ஸ்ரீரங்க கோட்டையை ஜெயலலிதா கைப்பற்றியதன் பின்னணி என்ன?
» தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?
» ஸ்ரீரங்க கோட்டையை ஜெயலலிதா கைப்பற்றியதன் பின்னணி என்ன?
» தோழியின் குளியலறையில் மொடல் அழகி மரணம்: பின்னணி என்ன?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum