Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


வீட்டில் இருந்தபடியே குழந்தைகளை கண்காணிக்க புதிய கருவி அறிமுகம்

Go down

வீட்டில் இருந்தபடியே குழந்தைகளை கண்காணிக்க புதிய கருவி அறிமுகம் Empty வீட்டில் இருந்தபடியே குழந்தைகளை கண்காணிக்க புதிய கருவி அறிமுகம்

Post by oviya Sun Feb 08, 2015 11:22 am

குழந்தைகளின் பாதுகாப்பை வீட்டில் இருந்தபடியே கண்காணிப்பதற்காக புதிய கருவி விரைவில் பெங்களூருவில் அறிமுகமாக உள்ளது.
இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் பெற்றோர் தங்களது குழந்தைகளி பாதுகாப்பை அறிந்து கொள்வதற்காகவும், அவர்கள் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு கொள்வதற்காகவும் புதிய கருவி வந்துள்ளது.

குழந்தைகளின் பள்ளி ஐ.டி கார்டுகளில் எளிதில் பொருத்தி கொள்ளும் இந்த கருவியை ரித்தீஸ் பாண்டியா என்பவர் அறிமுகம் செய்துள்ளார்.

இதில் 2 அவசர உதவி எண்களை பதிவு செய்து கொள்ளலாம். ஒன்று பெற்றோர், மற்றொன்று வேறு யாருடைய தொலைபேசி எண்களையாவது பதிவு செய்து வைக்கலாம். இதற்கு கணிணியின் உதவியும் மிகவும் அவசியம் தேவை.

இதுபற்றி அவர் கூறுகையில், நானும் ஒரு பெண் குழந்தையின் தந்தை என்பதால் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் அசம்பாவிதங்களில் இருந்து அவர்களை மீட்பதற்காக இந்த கருவியை கண்டு பிடித்தேன்.

இது குறித்து 400க்கும் அதிகமான பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் இதன் மூலம் எப்படி எங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியும் என்று கேள்வி எழுப்பியபோது நான் அவர்களிடம் இந்த கருவி பற்றிய பயன்பாட்டை எடுத்து கூறினேன்.

குழந்தைகள் கழுத்தில் அணியும், ஐ.டிகார்டுகளில் இந்தக் கருவியை பொருத்தலாம். ஆபத்து நேரத்தில் பட்டனை குழந்தை அழுத்தினால் போதும், அதில் பதிவு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்கு தகவல் கிடைத்துவிடும்.

இந்த கருவி மூலம் குழந்தைகள் ஆபத்தான நிலையில் இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடலாம். பாலியல் வன்கொடுமைகளில் இருந்தும், இந்த கருவி குழந்தையை தற்காத்து கொள்ளும் வசதி கொண்டது.

மேலும், வரும் கல்வி ஆண்டுகளில் இருந்து இந்த கருவியை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் இது குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum