Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரசவத்தின் போது 3 பெண்கள் மரணம்…2 பேர் கவலைக்கிடம்: அலட்சியபோக்கு காரணமா?

Go down

பிரசவத்தின் போது 3 பெண்கள் மரணம்…2 பேர் கவலைக்கிடம்: அலட்சியபோக்கு காரணமா? Empty பிரசவத்தின் போது 3 பெண்கள் மரணம்…2 பேர் கவலைக்கிடம்: அலட்சியபோக்கு காரணமா?

Post by oviya Tue Dec 30, 2014 2:15 pm

உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 5 நாட்களில் பிரசவ சிகிச்சையின்போது 3 பெண்கள் உயிரிழந்தனர்.
உதகை அரசு மகப்பேறு மருத் துவமனையில், கடந்த 23ம் திகதி எமரால்டை சேர்ந்த ஜெயந்தி என்பவர் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரசவத்துக்கு பின்னர் ஏற்பட்ட மூச்சுத் திணறலால் கடந்த 24ம் திகதி உயிரிழந்தார்.

கூடலூர் அருகே கொளப் பள்ளியை சேர்ந்த அமுதா என்பவருக்கு கடந்த 26-ம் திகதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதிக ரத்தப்போக்கு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.

உதகை, எல்க் ஹில் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவர் கவலைக்கிடமான நிலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். மேலும் ராதிகா என்பவருக்கும் நேற்று ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

சரஸ்வதி என்பவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே, இவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கவலைக்கிடமாக உள்ள ரேவதியின் உறவினர்கள் மருத்துவக் குழுவினரை முற்றுகையிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மருத்துவர்களின் அலட்சியமும், மருத்துவமனை ஊழியர்கள் பிரசவம் பார்ப் பதாலும்தான் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவதாகக் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரஸ்வதி, நேற்று மாலை உயிரிழந்தார் என்ற தகவலை அறிந்த திமுக, தமுமுக மற்றும் இந்து முன்னணியினர் உதகை மகப்பேறு மருத்துவமனையையும், சுகாதாரத் துறை இணை இயக்கு நர் அமராவதி ராஜனையும் முற்றுகையிட்டனர்.

உதகை பி-1 காவல் ஆய்வாளர் விநாயகம் தலைமையிலான பொலிசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum