Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மர்மமான முறையில் பலியான மருமகள், மற்றும் 3 பேரன்கள்: முன்னாள் எம்.பி குடும்பத்துடன் கைது

Go down

மர்மமான முறையில் பலியான மருமகள், மற்றும் 3 பேரன்கள்: முன்னாள் எம்.பி குடும்பத்துடன் கைது Empty மர்மமான முறையில் பலியான மருமகள், மற்றும் 3 பேரன்கள்: முன்னாள் எம்.பி குடும்பத்துடன் கைது

Post by oviya Thu Nov 05, 2015 1:51 pm

தெலுங்கானாவில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி-யின் மருமகள், மற்றும் 3 பேரன்கள் மர்மமான முறையில் பலியானதையடுத்து, முன்னாள் எம்.பி, அவரது மனைவி, மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
வாரங்கல் மக்களவைத் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த முன்னாள் எம்.பி. சிரிசில்லா ராஜய்யா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில், இவரது வீட்டின் மேல் மாடியில் வசித்து வந்த இவரது மருமகள் சாரிகா மற்றும் 3 பேரன்கள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்தபோது, சாரிகாவின் கணவர் அனில் வீட்டில் இல்லை என கூறப்படுகிறது.

சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார், முன்னாள் எம்.பி ராஜய்யா, அனில் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு சென்று, திறந்த நிலையில் காணப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் ரெகுலேட்டரில் இருந்த கைரேகையை பதிவு செய்துள்ளனர்.

பின்னர், 4 உடல்களும் மீட்கப்பட்டு வாரங்கல் எம்.ஜி.எம். அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சாரிகாவின் பெற்றோர் குடும்ப பிரச்சினையால்தான் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக பொலிசில் புகாரளித்ததால் ராஜய்யா, அவரது மனைவி மாதவி, மகன் அனில் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதனிடையே, ராஜய்யாவின் மகன் அனில்குமார் ரகசியமாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் அந்த விடயம் மனைவிக்கு தெரியவந்ததையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவத்தை தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் சிரிசில்லா ராஜய்யாவை இடைத்தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும், ராஜய்யாவுக்கு பதிலாக சத்யநாராயணா என்பவர் மனுதாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காங்கிரஸ் வேட்பாளராக மனுத்தாக்கல் செய்துள்ளார்.


oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum