Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


35 வருடங்களாக திருத்தப்படாத வீதி! வவுனியாவில் மூவின மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம்

Go down

35 வருடங்களாக திருத்தப்படாத வீதி! வவுனியாவில் மூவின மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் Empty 35 வருடங்களாக திருத்தப்படாத வீதி! வவுனியாவில் மூவின மக்களும் இணைந்து ஆர்ப்பாட்டம்

Post by oviya Wed Sep 16, 2015 3:04 pm

வவுனியா, நெளுக்குளத்திலிருந்து செட்டிகுளம் செல்லும் நேரியகுளம் ஊடான பிரதான போக்குவரத்து பாதையானது, 35 ஆண்டு காலமாக திருத்தம் செய்யப்படாமையை கண்டித்து இன்று மூவின மக்களும் ஒன்று திரண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
உலுக்குளம் சந்தியில் ஒன்றுகூடிய மக்கள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் வீதியின் இருமருங்கிலும் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் அங்கிருந்து ஊர்வலமாக உலுக்குளம் பாடசாலை வரை சென்று ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்திருந்தனர்.



தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பயன்படுத்தும் இவ் வீதியில் அரச திணைக்களங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலை என்பன அமைந்துள்ள நிலையில் போக்குவரத்து செய்வதில் பெரும் இடையூறுகளை எதிர்கொள்வதோடு விபத்துக்களும் சம்பவிக்கின்றன.

இது தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டிய போதிலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லையென தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், சுமார் 25 கிலோமீற்றர் தூரமான இவ் வீதியை செப்பனிட்டு தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அனுப்பி வைக்கவுள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களிடமும் மக்களால் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum