Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால் எரித்து கொலை: திடுக்கிடும் தகவல்கள்

Go down

3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால் எரித்து கொலை: திடுக்கிடும் தகவல்கள்  Empty 3 பேரை திருமணம் செய்த இந்திராணி.. மகள் மிரட்டியதால் எரித்து கொலை: திடுக்கிடும் தகவல்கள்

Post by oviya Fri Aug 28, 2015 4:22 pm

இந்திராணி முகர்ஜியால் என் உயிருக்கு ஆபத்து என்று அவருடைய மகன் மிக்கேல் போரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டார் இந்தியா’ தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி அசாம் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற என்ஜீனியரின் மகள்.

முதல் கணவரான சித்தார்தாசிடம் இருந்து விவாகரத்து பெற்ற இந்திராணி, கொல்கத்தாவை சேர்ந்த தொழில் அதிபர் சஞ்சீவ் கண்ணாவை மணம் முடித்தார்.

இந்த திருமணத்தின் வழியாக இந்திராணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அதற்கு பின் மும்பையில் குடியேறிய இந்திராணி, முதல் இரு திருமணங்கள் மற்றும் குழந்தைகளை மறைத்து பீட்டர் முகர்ஜியை திருமணம் செய்தார்.

மேலும், இந்திராணி பெற்ற மகள் ஷீனா போராவை, கணவரிடம் மற்றவர்களிடமும் தங்கை என்றும் மகன் மிக்கேலை தம்பி என்றும் அறிமுகம் செய்துள்ளார்.

பீட்டர் முகர்ஜி ஏற்கனவே சப்னம் என்பரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு ராகுல், ராபின் என இரு மகன்கள் இருந்தனர்.

இதில் உறவு முறையில் அவர்கள் அண்ணன்- தங்கையான ராகுலுக்கும், ஷீனா போராவுக்கும் இடையே காதல் மலர்ந்ததால் அவர்களது காதலுக்கு இந்திராணி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

என்னை இடையூறு செய்தால், நான்தான் உனது மகள் என்பதை பீட்டர் முகர்ஜியிடம் சொல்லி விடுவேன் என்று ஷீனா போரா மிரட்டியுள்ளார்.

இந்த பிரச்சனை தொடர்பாக தனது 2வது கணவர் சஞ்சீவ் கண்ணாவுடன் பேசிய இந்திராணி, ஷீனாவை கொலை செய்து விடலாம் என்று இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து பாந்திரா நேஷனல் கல்லூரி அருகில் காருக்குள் வைத்து ஷீனாவை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளனர்.

இந்த கொலைக்கு சஞ்சீவ் கண்ணாவும், ஓட்டுனர் ஷாம் மனோகர் ஆகியோர் உடந்தையாக இருந்தனர்.

பின்னர் ராய்காட் காட்டுப்பகுதியில் ஷீனாவின் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இது தொடர்பாக இந்திராணி உள்ளிட்ட 3 பேரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திராணியின் மகன் மிக்கேல் தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியில் தாத்தா-பாட்டியுடன் வசித்து வருகிறார்.

அவர் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், எனது அக்காவுக்கு 2 வயதாகும் இருக்கும் போதே தாயார் எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

தாத்தா-பாட்டிதான் எங்களை வளர்த்து வந்தனர். எனினும் தாய் இந்திராணிதான் எங்களை படிக்க வைத்தார்.

மும்பையில் உயர்ந்த நிலையில் இருப்பதாகவும் இதனால்தான் என்னை தம்பி என்றும் அக்காவை தங்கை என்றும் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தார்.

அக்கா பற்றி கேட்ட போது அமெரிக்கா போய் விட்டதாக என்னிடம் கூறினார். நான்தான் தற்போது தாத்தா பாட்டியை கவனித்து வருகிறேன்.

எனது தாயார் பற்றிய ஆதாரங்களை பொலிசில் கொடுப்பேன் என்றும் நான் தான் அவர்களின் அடுத்த இலக்காக இருக்கும் என்று அஞ்சுகிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum